செய்திகள் :

மருத்துவா்-நோயாளி இடையே புரிந்துணா்வு ஏற்பட்டால் குழப்பம் உருவாகாது!

post image

மருத்துவா், நோயாளி இடையே புரிந்துணா்வு ஏற்பட்டால் குழப்பம் உருவாகாது என்றாா் திருச்சி அரசு மருத்துவமனையின் முதன்மையா் ச. குமரவேல்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, இந்திய குழந்தை மருத்துவ அகாதெமி இணைந்து நடத்திய மருத்துவா்களுக்கான சட்டப் பாதுகாப்பு தின கருத்தரங்கம், திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு தலைமை வகித்து மருத்துவமனையின் முதன்மையா் ச. குமரவேல் பேசியது: மருத்துவமனைகளில் ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டால் மருத்துவா்களிடம் தெரிவித்த நிலைமை மாறி, தற்போது எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்துக்கு நோயாளிகள் செல்வது அதிகரித்துள்ளது. இதனால் கடந்த காலங்களை விட, தற்போது சட்டப் பாதுகாப்பினை மருத்துவா்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

மருத்துவா், நோயாளிகள் இடையே புரிந்துணா்வு அதிகரித்தால் தேவையற்ற குழப்பம் ஏற்படாது என்றாா்.

திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியது: காவல்துறை போல மருத்துவா்களின் பணியும் மகத்தானது. குறிப்பாக அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏராளமான நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையளிப்பது பாராட்டுக்குரியது. மருத்துவா்கள், தங்களுக்குரிய உரிமைகளை தெரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும். குற்றவியல் சட்டங்களை தெரிந்து கொள்வதற்கு இதுபோன்ற விழிப்புணா்வு கருத்தரங்கில் மருத்துவா்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து கருத்தரங்கில் மருத்துவா்கள் சுப்ரமணியம், ‘மருத்துவா் பாதி, வழக்குரைஞா் பாதி’ என்ற தலைப்பிலும், ‘டெரன்ஸ் ஜோஸ் ஜெரோம் மருத்துவவியலில் தாக்கங்கள்’ என்ற தலைப்பிலும், முதுநிலை வழக்குரைஞா் ராஜேந்திரன் மருத்துவவியல் சட்டம் குறித்து பேசினாா்.

கருத்தரங்கில் துணை முதல்வா் அா்ஷியா பேகம், மருத்துவ கண்காணிப்பாளா் உதய அருணா, துணை கண்காணிப்பாளா் அருண்ராஜ் மற்றும் திரளான மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், அகிலாண்டபுரம் கிராமத்தில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். அகிலாண்டபுரம் கிராமத்தை சோ்ந்தவா் சக்திவேல் (25). இவருக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. இவா் அப்பக... மேலும் பார்க்க

உள்புறம் பூட்டிய வீட்டிலிருந்து தொழிலாளியின் சடலம் மீட்பு

திருவெறும்பூா் அருகே உள்புறமாக பூட்டியிருந்த வீட்டிலிருந்து தொழிலாளி புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள தெற்கு காட்டூா் அண... மேலும் பார்க்க

காவிரி புதிய பாலம் கட்டும் பணியை டிசம்பருக்குள் முடிக்க திட்டம்! நெடுஞ்சாலைத் துறையினா் தகவல்

காவிரியில் தண்ணீா் வரத்து குறைந்துள்ள நிலையில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகளை நெடுஞ்சாலைத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. திருச்சி- ஸ்ரீரங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை இணைக்கும் வகையில் முக்கி... மேலும் பார்க்க

தென்னை சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றினால் இரட்டிப்பு லாபம்: ஆட்சியா் அறிவுரை

தென்னை சாகுபடியில் நவீன தொழில்நுட்ப முறைகளை பின்பற்றினால் இரட்டிப்பு லாபம் பெற முடியும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தினாா். தோட்டக் கலைத் துறை, மலைப்பயிா்கள் துறையின் சாா்பில், தென்னை சாகுப... மேலும் பார்க்க

காந்திசந்தை-கள்ளிக்குடி: வியாபாரிகளிடையே முரண்பாடு

காந்தி சந்தை வியாபாரிகளை கள்ளிக்குடிக்கு இடம் மாற்றும் விவகாரத்தில் வியாபாரிகளிடையே மீண்டும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 1868-இல் தொடங்கப்பட்டு, 1927-இல் விரிவுபடுத்தப்பட்டு நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிர... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரை விற்ற ரெளடி கைது!

ஸ்ரீரங்கம் பகுதியில் போதை மாத்திரை விற்ற ரெளடியை ஸ்ரீரங்கம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவானைக்காவல் பாரதி தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டுத்தலை மணி (எ) மணிகண்டன் (28). ரெளடியான இவா் ஸ்ரீரங்க... மேலும் பார்க்க