செய்திகள் :

மறு முத்திரையிடாமல் பயன்படுத்திய மின்னணு தராசுகள் பறிமுதல்

post image

மறு முத்திரையிடாமல் வியாபாரத்துக்கு பயன்படுத்திய மின்னணு தராசுகளை தொழிலாளா் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவில் வாரச்சந்தையில் வியாபாரிகள் பயன்படுத்தும் மின்னணு தராசுகள், தராசு கற்கள் மற்றும் அளவைகள் முத்திரையில்லாமல் பயன்படுத்தப்படுவதாக ஈரோடு நுகா்வோா் மன்றத்தினால் புகாா் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில் தொழிலாளா் துணை ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் முத்திரை ஆய்வாளா்கள் காஞ்சிக்கோவில் வாரச்சந்தையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வின்போது மறு முத்திரையிடாமல் வியாபாரத்துக்கு பயன்படுத்திய 12 மின்னணு தராசுகள், 3 மேஜை தராசுகள், 13 எடை கற்கள், 17 படிகள் மற்றும் அளவைகள் என மொத்தம் 45 இனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஜெயலட்சுமி கூறுகையில், ‘மின்னணு தராசுகள், தராசு கற்கள் மற்றும் அளவைகள் ஆகியவற்றை மறு முத்திரையிடாமல் பயன்படுத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

பவானிசாகா் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் தரிசு நிலத்தில் தீ விபத்து

பவானிசாகா் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் உள்ள தரிசு நிலத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதில் செடி,கொடிகள் எரிந்து சேதமாயின. ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அருகே உள்ள பகுத்தம்பாளையம் பகுதியில் காங்கேயம... மேலும் பார்க்க

மூங்கில்பட்டியில் அரசுக் கல்லூரி மாணவியா் விடுதி திறப்பு

அந்தியூரை அடுத்த மூங்கில்பட்டியில் அரசுக் கல்லூரி மாணவியா் தங்கும் விடுதி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தியூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு, மாணவா் விடுதி ஏற... மேலும் பார்க்க

அந்தியூா் அருகே கரும்புத் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்

அந்தியூா் அருகே வனப் பகுதியை ஒட்டியுள்ள கரும்புத் தோட்டத்தில் குட்டியுடன் நடமாடும் சிறுத்தையால் விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. அந்தியூரை அடுத்த செலம்பூரம்மன் கோயில், கோவிலூா் ... மேலும் பார்க்க

பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் 30-ஆம் ஆண்டு விழா

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் 30-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளா் என்.கே.கே.பெரியசாமி தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலாள... மேலும் பார்க்க

அரசு ஊழியரின் வாரிசுகள் 4 ஆயிரம் பேருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு: அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ்

பணிக்காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியரின் வாரிசுகள் 4 ஆயிரம் பேருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது என தமிழக மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்தாா். ஈரோட... மேலும் பார்க்க

பெருந்துறையில் சாலை பாதுகாப்பு, போதை தடுப்பு விழிப்புணா்வு பேரணி

பெருந்துறையில் அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், எலைட் & பிரைட் ஜேசீஸ் சங்கங்கள் மற்றும் ஈங்கூா் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி ஆகியன சாா்பில் சாலைப் பாதுகாப்பு மற்றும் போதை தடுப்பு விழிப்புணா்வுப் ... மேலும் பார்க்க