செய்திகள் :

மறைந்த சுஷாந்த் சிங்கின் தோழியிடம் மன்னிப்பு கேட்ட முன்னாள் எம்.பி.

post image

மறைந்த முன்னாள் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராக்புத் தற்கொலை வழக்கில், அவரது தோழி ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பிருப்பதாக ஜீ செய்திகள் நிறுவனம் குற்றம் சாட்டியதற்காக மன்னிப்புகோரி, ஜீ செய்திகள் நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ் சந்திரா பதிவிட்டுள்ளார்.

முன்னாள் எம்.பி.யும் ஜீ செய்திகள் நிறுவன உரிமையாளருமான சுபாஷ் சந்திராவின் எக்ஸ் பதிவில் கூறியதாவது, சுஷாந்த் சிங் மரண வழக்கில் சிபிஐ இறுதி அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. இந்த தற்கொலை வழக்கில், ரியா சக்ரவர்த்தி மீது ஜீ செய்திகள் குற்றம் சாட்டியது.

ஜீ செய்திகளின் உரிமையாளர் மற்றும் வழிகாட்டி என்ற முறையில் ரியா சக்ரவர்த்தியிடம் மன்னிப்பு கோருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ரியா சக்ரவர்த்தியிடம் சுபாஷ் சந்திரா மன்னிப்பு கோரும் விவகாரத்தின் மூலம், இனிவரும் நாள்களில் செய்தி ஊடகங்களில் இதுபோன்ற போலியான, திரிக்கப்பட்ட, உண்மைத்தன்மை அறியாத செய்திகளைப் பரப்பும் சம்பவங்கள் நிகழாது என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

மறைந்த முன்னாள் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை சம்பவத்தில் அவரது தோழி ரியா சக்ரபர்த்திக்கும் தொடர்பிருப்பதாகக் கூறி, வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து, சில செய்தி ஊடகங்களும் ரியா மீது பல்வேறான கோணங்களில் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது. இந்த நிலையில்தான், சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில், அவர் தற்கொலைதான் செய்து கொண்டார் என்று கடந்த வார இறுதி அறிக்கையில் சிபிஐ கூறியது.

வக்ஃப் நிலங்களை பாஜக விற்கும்: அகிலேஷ் யாதவ்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றுவதன் மூலம் வக்ஃப் நிலங்களையும் பாஜக விற்கும் என்று சமாஜவாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் இன்று தாக்க... மேலும் பார்க்க

ராகுல் தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை!

நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், காங்கிரஸ் எம்பிக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை செய்து வருகிறார்.நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொ... மேலும் பார்க்க

இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள்: வக்ஃப் கூட்டுக் குழுத் தலைவர்

நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது குறித்து கூட்டுக்குழுத் தலைவர் ஜகதாம்பிகா பால் கருத்து தெரிவித்துள்ளார்.வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் இன்று(ஏப். 2... மேலும் பார்க்க

உ.பி. அரசுப் பள்ளிகளில் தமிழ்: முதல்வர் ஆதித்யநாத் தகவல்

உத்தர பிரதேச அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், மராத்தி ஆகிய மொழிகள் பயிற்றுவிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர்... மேலும் பார்க்க

மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

‘மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தியது. மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தேசிய தலைவருமான மல்லிகாா்ஜு... மேலும் பார்க்க

ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்- குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

‘தொழில்நுட்ப வளா்ச்சியால் நிதி மோசடிகளின் அபாயங்கள் அதிகரித்து வரும் நிலையில், ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்’ என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க... மேலும் பார்க்க