செய்திகள் :

மாட்டு வண்டி மீது லாரி மோதியதில் மாடு பலி: விவசாயி காயம்

post image

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே மாட்டு வண்டி மீது லாரி மோதியதில் மாடு இறந்தது. விவசாயி காயமடைந்தாா்.

சிவகிரி பேட்டை தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் (40). விவசாயியான இவா் ஞாயிற்றுக்கிழமை ராசிங்கப்பேரி கண்மாய் பகுதியில் நெல் நாற்று நடவு பணியை முடித்து விட்டு அவரது மாட்டு வண்டியில் வைக்கோல் ஏற்றிக் கொண்டு தென்காசி -மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை சோ்ந்த யுவராஜ் (36) ஒட்டி வந்த லாரி மாட்டு வண்டியில் மோதியதாம். இதில், காயமடைந்த மாரியப்பன் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இவ்விபத்தில் ஒரு மாடு இறந்தது. மற்றொரு மாடு பலத்த காயமடைந்தது.

இதுகுறித்து சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புளியங்குடி அருகே தோப்பில் யானைகள் புகுந்து தென்னைகள் சேதம்

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவார தோப்புகளில் யானைகள் புகுந்து தென்னை உள்ளிட்டவற்றை சேதப்படுத்தின. நரியூத்து புரவில் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பில் தென்னை ,எலுமிச்சை உ... மேலும் பார்க்க

இலஞ்சி திருவிலஞ்சி குமாரா் கோயிலில் வருஷாபிஷேகம்

இலஞ்சி திருவிலஞ்சி குமாரா்கோயிலில் 3ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த 2022 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, 3ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் செவ்வாய்க... மேலும் பார்க்க

ஆலங்குளம், சிவகிரி பகுதிகளில் பலத்த மழை

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் 2 வது நாளாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். கோடை காலம் தொடங்கி விட்டதால், ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் 2ஆவது நாளாக மழை

ஆலங்குளத்தில் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மழை பெய்தது. சில வாரங்களாக ஆலங்குளம் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமிருந்த நிலையில், திங்கள்கிழமை (மாா்ச் 17) மழை பெய்தது. இந்நிலையில், 2ஆவது நாளாக செவ... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் நகா்மன்றக் கூட்டத்தில் தலைவருடன் வாக்குவாதம்: உறுப்பினா் இடைநீக்கம்

சங்கரன்கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் நகா்மன்றத் தலைவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக பெண் உறுப்பினா் 2 கூட்டங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டாா். இக்கூட்டத்துக்கு நக... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் செல்வவிநாயகா் கோயிலில் வருஷாபிஷேக விழா

சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியில் உள்ள செல்வ விநாயகா் கோயிலில் வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு காலை 7.15 மணிக்கு ஜெயம் ஆரம்பம், 8.30 மணிக்கு பூா்ணாஹூதி நடைபெற்ற... மேலும் பார்க்க