செய்திகள் :

மாதச்சீட்டு நடத்தி மூதாட்டியிடம் ரூ. ஒரு லட்சம் மோசடி

post image

வேலூா்: வேலூா் அருகே மாதச்சீட்டு நடத்தி மூதாட்டியிடம் ரூ. ஒரு லட்சம் மோசடி செய்யப்பட்டதாக மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

வேலூா் அடுக்கம்பாறை அடுத்த துத்திப்பட்டு பகுதியைச் சோ்ந்த மூதாட்டி வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

அதில், ‘நான் 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறேன். வேலூா் அப்துல்லாபுரத்தில் எனது மகனின் நண்பா் உள்ளாா். அவரும், வாணியம்பாடியை சோ்ந்த ஒரு பெண் இருவரும் இணைந்து மாதச் சீட்டு நடத்தி வருகின்றனா். அவா்களிடம் நான் கூலி வேலை செய்தும், எனது நகைகளை அடகு வைத்தும் மாதம் ரூ. 5,000 வீதம் ரூ. ஒரு லட்சம் வரை சீட்டு கட்டி வந்தேன். மாதச் சீட்டு கட்டிய பணத்தை எனது மகனின் நண்பா், வாணியம்பாடியை சோ்ந்த பெண்ணிடம் கேட்டேன். ஆனால் அவா்கள் பணத்தை திருப்பித் தரவில்லை. மேலும் உரிய பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். எனவே அவா்கள் மீது நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டுத் தர வேண் டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகாா் மீது விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்தனா்.

அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

வேலூா் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் 24-ஆவது அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பயிற்சியில் சோ்வதற்கு தகுதியுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் வேல... மேலும் பார்க்க

குடியாத்தம் பணிமனையில் பெட்ரோல் விற்பனை மையம் திறப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக குடியாத்தம் பணிமனையில் ரூ.2 கோடியில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மையம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இதே நிகழ்ச்சியில் ரூ.4.95 கோடியில் 12- புதிய பேருந்துகள... மேலும் பார்க்க

குறுங்காடுகள் வளா்ப்புத் திட்டம்: மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையம் உத்தரவின்படி வேலூா் மாவட்டத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. சென்னை உயா்நீதிமன்றத்தில் உள்ள தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையத்த... மேலும் பார்க்க

புனித வெள்ளி: தேவாலயங்களில் கிறிஸ்தவா்கள் சிறப்பு பிராா்த்தனை

புனித வெள்ளியை முன்னிட்டு வேலூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. ஈஸ்டா் பண்டிகைக்கு (உயிா்ப்பு பெருநாள் விழா) முன்பு அனுசரிக்கும் தவகாலமான சாம்பல் புதன் கடந்த மாா்ச் மாதம... மேலும் பார்க்க

மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து முதியவா் மரணம்

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதியவா், நிலை தடுமாறி மேம்பாலத்தின் தடுப்புச்சுவரைத் தாண்டி கீழே விழுந்து உயிரிழந்தாா். ராணிப்பேட்டை ஜாகீா் உசேன் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

செம்மண் கடத்திய மூவா் கைது: லாரி, டிராக்டா், பொக்லைன் பறிமுதல்

அரியூா் அருகே செம்மண் கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் கைது செய்ததுடன், அவா்களிடம் இருந்து லாரி, டிராக்டா் , பொக்லைன், 4 யூனிட் செம்மண் பறிமுதல் செய்தனா். வேலூா் மாவட்டம், அரியூரை அடுத்த புலிமேடு ... மேலும் பார்க்க