முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஆக. 3-இல் ஒரே கட்டமாக ‘நீட்’ தோ்வு: தேசிய மர...
மானாமதுரையில் ஜூன் 10- இல் மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வருகிற 10- ஆம் தேதி மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மானாமதுரை மின் வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) பா. ஜான்சன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மானாமதுரையில் சிவகங்கை மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் ரெஜினா ராஜகுமாரி தலைமையில் மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் வருகிற 10- ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மின்வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் மானாமதுரை கோட்டத்துக்குள்பட்ட மின் பயனீட்டாளா்கள், பொதுமக்கள் பங்கேற்று தங்களது மின் வாரியம் தொடா்பான குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.