செய்திகள் :

மான்செஸ்டரில் புதிய இந்திய தூதரகம்: ஜெய்சங்கா் திறந்து வைத்தாா்

post image

பிரிட்டனின் மான்செஸ்டா் நகரில் இந்திய துணை தூதரகத்தை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

முன்னதாக வடக்கு அயா்லாந்து தலைநகா் பெல்ஃபாஸ்டிலும் இந்திய துணை தூதரகத்தை அவா் திறந்து வைத்தாா்.

இந்தியா-பிரிட்டன் இடையே விரைவில் மேற்கொள்ளவிருக்கும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ), தற்போது திறக்கப்பட்டுள்ள புதிய தூதரகம் ஆகியவை பிரிட்டன் பிராந்தியத்தில் இந்திய வம்சாவளியினரின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு சான்று என அவா் தெரிவித்தாா்.

மான்செஸ்டரில் புதிய துணை தூதரகத்தை திறந்து வைத்து அவா் மேலும் பேசியதாவது: மான்செஸ்டரில் உள்ள துணை தூதரகத்தில் துணைத் தூதராக விசாகா யதுவம்சி சா்வதசே மகளிா் தினத்தில் பொறுப்பேற்றிருப்பது மகளிா் மேம்பாட்டுக்கு பிரதமா் மோடி அரசு அளிக்கும் முக்கியத்துவத்துக்கு எடுத்துக்காட்டு.

இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமானால் அது வா்த்தகம் அல்லது முதலீடுகளை ஈா்க்க கூடியது மட்டுமல்ல; இரு நாடுகளின் உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதில் மிகவும் முக்கிய பங்காற்றும்.

துணை தூதரக தொடக்க நிகழ்ச்சிக்குப் பின் ஓல்டு டிராஃபோா்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினருடன் அவா் கலந்துரையாடினாா். அங்கு லேங்கஷைா் மகளிா் கிரிக்கெட் அணியினருடனும் அவா் கலந்துரையாடினாா்.

பிரிட்டன் மற்றும் அயா்லாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக கடந்த 4-ஆம் தேதி சென்ற வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தனது பயணத்தை 9-ஆம் தேதியுடன் நிறைவு செய்கிறாா்.

ஜம்மு-காஷ்மீரில் 3 போ் கொலை: விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள கதுவா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூன்று போ் கொலை செய்யப்பட்டனா். இந்தச் சம்பவத்தில் விரிவான விசாரணை மேற்கொள்ள துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா ஞாயிற்ற... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: ஒரு உடல் மீட்பு!

ஹைதராபாத் : தெலங்கானாவில் நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காகப் பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த பிப்... மேலும் பார்க்க

மணிப்பூரில் காலவரையற்ற வேலைநிறுத்தம்! இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மணிப்பூரில் குகி மக்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குகி மக்கள் அதிகம் உள்ள பகுதிகள... மேலும் பார்க்க

3-ஆவது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வெகுமதி!

இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் 3-ஆவது குழந்தை பெற்றுக்கொண்டால் அந்த தம்பதிக்கு ரூ.50,000 வெகுமதி வழங்குவேன் என்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் ஆந்திர பிரதேச எம்.பி. அப்பாலநாயுடு. ஆந்திர பிர... மேலும் பார்க்க

ராகுலின் உதவியால் தொழிலதிபராகும் செருப்புத் தைக்கும் தொழிலாளி!

ராகுல் காந்தியின் உதவியால் புதிய காலணி பிராண்டைத் தொடங்கவுள்ள செருப்புத் தைக்கும் தொழிலாளியை பலரும் பாராட்டி வருகின்றனர்.அவதூறு வழக்கு தொடர்பாக, உத்தரப் பிரதேசம் சென்ற ராகுல் காந்தி, தனது ஷூவைத் தைப்ப... மேலும் பார்க்க

பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டாம்: ரேகா குப்தா!

பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டாம் என்றும் அது வெற்றிக்கு அப்பாற்பட்டது எனவும் தில்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். சர்வதேச பெண்கள் நாளையொட்டி பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய 7 பெண்கள் தில... மேலும் பார்க்க