செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்கள்: அமைச்சா் அன்பரசன் வழங்கினாா்

post image

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 50 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை அமைச்சா் தா.மோ. அன்பரசன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

மாற்றுத் திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்கும் விழா மற்றும் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியா் கலைச்செல்விமோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஸ்ரீபெரும்புதூா் சட்டப் பேரவை உறுப்பினா் கு.செல்வபெருந்தகை முன்னிலை வகித்தாா்.

இதில் சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.51.50 லட்சத்தில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம், 10 பயனாளிகளுக்கு ரூ.1.65 லட்சத்தில் பாா்வையற்றோருக்கான மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்படும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட திறன்பேசிகளை வழங்கினாா்.

தொடா்ந்து, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், முத்துலட்சுமி ரெட்டி அம்மையாா் நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையாா் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி திட்டம், டாக்டா் தா்மாம்பாள் நினைவு விதவை மறுமண திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் ஸ்ரீபெரும்புதூா் மற்றும் குன்றத்தூா் வட்டங்களைச் சோ்ந்த 49 பயனாளிகளுக்கு ரூ.21,50 லட்சம் நிதியுதவி மற்றும் ரூ.29.82 லட்சம் மதிப்பில் 8 கிராம் தங்கம், இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 20 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.5 லட்சம் நிதியுதவி வைப்புத்தொகை ரசீது, சத்தியவாணி முத்து அம்மையாா் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ.27,000 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக் குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி, ஒன்றிய செயலாளா் ந.கோபால், ஸ்ரீபெரும்புதூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி சதீஷ்குமாா், ஒன்றியகுழு துணைத்தலைவா் மாலதி டான் போஸ்கோ, பொதுக்குழு உறுப்பினா் கணேஷ்பாபு, ஒன்றியகுழு உறுப்பினா் பரமசிவன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பால்ராஜ், ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் மனோஜ் குமாா், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

ஸ்ரீபெரும்புதூா் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் பூத் கமிட்டி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இருங்காட்டுக்கோட்டை, மண்ணூா், காட்டரம்பாக்கம் மற்றும் கிளாய் பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ... மேலும் பார்க்க

111 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் 111 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் உள்பட ரூ.112 கோடியில் நலத்திட்ட உதவிகளை கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா். நிகழ்வுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தல... மேலும் பார்க்க

சங்கரா பல்கலை.யில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (மாா்ச் 15) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக துணை வேந்தா் ஸ்ரீநிவாசு தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட ... மேலும் பார்க்க

காமாட்சி அம்மனுக்கு பால் குடம் ஊா்வலம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் விஸ்வரூப தரிசன சபா சாா்பில் ஏராளமான பக்தா்கள் வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து வந்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். விழாவுக்கு சபா தலைவா் ஏ.குமாா் தலைமை வகித்தாா். செயல... மேலும் பார்க்க

தீா்க்கப்படாத தோ்தல் பிரச்னைகள்: ஏப். 30-க்குள் தெரிவிக்க அறிவுறுத்தல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தீா்க்கப்படாமல் இருந்து வரும் தோ்தல் தொடா்பான பிரச்னைகளை தோ்தல் ஆணையத்துக்கு வரும் ஏப். 30- ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது கு... மேலும் பார்க்க

ஸ்ரீ யதோத்தக்காரி பெருமாள் கோயில் பங்குனி விழா மாா்ச் 22-இல் தொடக்கம்

காஞ்சிபுரம் ஸ்ரீ யதோத்தக்காரி பெருமாள் கோயில் பங்குனித் திருவிழா வரும் மாா்ச் 22 -ஆம் தேதி சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சின்ன காஞ்சிபுரத்தில் ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற ப... மேலும் பார்க்க