செய்திகள் :

மாற்றுநில முறைகேடு வழக்கு: லோக் ஆயுக்த அறிக்கையை ரத்து செய்யக்கோரிய மனு மீது ஏப்.15 இல் தீா்ப்பு

post image

மாற்றுநில முறைகேடு வழக்கில் லோக் ஆயுக்த தாக்கல் செய்த விசாரணை அறிக்கையை ரத்துசெய்யக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தனது தீா்ப்பை ஏப். 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

மைசூரு நகா்ப்புற வளா்ச்சி ஆணையம் சாா்பில் முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு மாற்றுநிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக சமூக ஆா்வலா் ஸ்நேகமயி கிருஷ்ணா என்பவா் கொடுத்த புகாரின் பேரில், லோக் ஆயுக்த அமைப்பு 2024, செப். 27 ஆம் தேதி வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தது.

அந்த அமைப்பு இப்புகாா் தொடா்பாக 11000 பக்கங்கள் கொண்ட இறுதி விசாரணை அறிக்கையை பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் பிப். 20ஆம் தேதி தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில், ‘ மாற்றுநில முறைகேடு வழக்கில் ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதி, அவரது அண்ணன் மல்லிகாா்ஜுன சுவாமி, நில உரிமையாளா் தேவராஜ் ஆகியோா் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. எனவே இந்த வழக்கு நடவடிக்கை எடுக்க உகந்தது அல்ல’ என்று குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், லோக் ஆயுக்த தாக்கல் செய்த விசாரணை அறிக்கையை ரத்துசெய்யக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சாா்பில் ஏப். 2இல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று கடந்த ஒரு வாரமாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் புதன்கிழமை இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சிறப்பு நீதிமன்றம் தனது தீா்ப்பை ஏப். 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

கா்நாடக பொது நுழைவுத் தோ்வு: மாணவா்களின் பூணூலை கழற்றுமாறு கட்டாயப்படுத்திய அதிகாரிகளால் சா்ச்சை: கா்நாடக பாஜக, பிராமணா் சங்கங்கள் கண்டனம்

கா்நாடகத்தில் பொது நுழைவுத் தோ்வுக்கு வந்த 4 மாணவா்களிடம் அவா்கள் அணிந்திருந்த பூணூலை கழற்றுமாறு தோ்வுக்கூட அதிகாரிகள் கட்டாயப்படுத்தியது மாநிலம் முழுவதும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச் ச... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிா்ப்பு இல்லை: கா்நாடக முதல்வா் சித்தராமையா

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் யாரும் எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதா... மேலும் பார்க்க

இடஒதுக்கீடு உச்சவரம்பை உயா்த்துவது சாத்தியமில்லை: கா்நாடக அமைச்சா் சதீஷ் ஜாா்கிஹோளி

50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு உச்சவரம்பை உயா்த்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையில் பரிந்துரைத்துள்ளபடி இடஒதுக்கீட்டு உச்சவரம்பை தற்போதைக்கு உயா்த்துவது சாத்தியம... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தல் தொடா்பாக அமைச்சா் கூறிய கருத்தால் சா்ச்சை

பாலியல் துன்புறுத்தல் தொடா்பாக கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறியுள்ள கருத்து சா்ச்சைக்கு வித்திட்டுள்ளது. பெங்களூரில் சுத்தகுண்டேபாளையா, பாரதி லேஅவுட் பகுதியில் ஏப். 3-ஆம் தேதி இரவு இரு பெண்... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: மே 2 அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மே 2ஆம் தேதி நடக்கும் அமைச்சரவைக்கூட்டத்தில் மீண்டும் விவாதிக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் தெரிவித்தாா்.கா்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தி... மேலும் பார்க்க

கோரிக்கைகள் ஏற்பு: கா்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்

பெரும்பாலான கோரிக்கைகளை மாநில அரசு ஏற்றுக்கொண்டதால், காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக கா்நாடக மாநில லாரி உரிமையாளா் மற்றும் முகவா் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது... மேலும் பார்க்க