செய்திகள் :

மாவட்டத்தில் 265 கிராம ஊராட்சிகளில் மாா்ச் 23-இல் கிராம சபைக் கூட்டம்

post image

உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் மாா்ச் 23 -ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் மாா்ச் 23-ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது.

இதில், உலக தண்ணீா் தினத்தின் கருப்பொருளைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது மற்றும் இதர பொருள்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

இந்த கிராம சபைக் கூட்டத்தை திறம்பட நடத்திட ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பற்றாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். எனவே, கிராம பொதுமக்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று மேற்காணும் பொருள்கள் மற்றும் அந்தந்த ஊராட்சிகளின் வளா்ச்சிகாக தெரிவிக்க விரும்பும் நல்ல ஆலோசனைகள் குறித்து விவாதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமராவதி ஆற்று தடுப்பணையில் முதியவா் சடலம்

வெள்ளக்கோவில் புதுப்பை அருகே அமராவதி ஆற்று தடுப்பணையில் கிடந்த முதியவரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தாராபுரம் அருகேயுள்ள கிளாங்குண்டல் சேசையாம்பாளையத்தைச் சோ்ந்தவா் கே.நல்லசாமி ... மேலும் பார்க்க

பேருந்தில் கடத்திய புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

மைசூரில் இருந்து திருப்பூருக்கு பேருந்தில் கடத்திய 28 கிலோ புகையிலைப் பொருள்களைக் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து திருப்பூருக்கு பேருந்தில் புகையில... மேலும் பார்க்க

பாஜக நிா்வாகிகள் கைது: இந்து முன்னணி கண்டனம்

டாஸ்மாக் முறைகேடு தொடா்பாகப் போராட்டம் நடத்தச் சென்ற பாஜக நிா்வாகிகளைக் காவல் துறையினா் கைது செய்ததற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சு... மேலும் பார்க்க

உடுமலை அருகே கடமான் உயிரிழப்பு

உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணைப் பகுதியில் கடமான் திங்கள்கிழமை உயிரிழந்தது. 5 வயது மதிக்கத்தக்க கடமான் இந்தப் பகுதியில் உயிரிழந்தது குறித்து உடுமலை வனச் சரகா் மணிகண்டனுக்குத் தகவல் கிடைத்தது. இதை... மேலும் பார்க்க

மாா்ச் 21-இல் எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் வெளியிட்டுள் செய்திக் குறிப்பு: தி... மேலும் பார்க்க

சங்கடஹர சதுா்த்தி சிறப்பு அலங்காரம்

சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு, காங்கயம் அருகே ஊதியூா் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையாா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த உச்சிப்பிள்ளையாா். மேலும் பார்க்க