செய்திகள் :

பேருந்தில் கடத்திய புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

post image

மைசூரில் இருந்து திருப்பூருக்கு பேருந்தில் கடத்திய 28 கிலோ புகையிலைப் பொருள்களைக் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து திருப்பூருக்கு பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தி வருவதாக வடக்கு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதன் பேரில் வடக்கு காவல் துறையினா் இந்தப் பேருந்தை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக திருப்பூரைச் சோ்ந்த பெத்தனசாமி (52) என்பவரைக் கைது செய்த காவல் துறையினா், அவரிடமிருந்து 28 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

அமராவதி ஆற்று தடுப்பணையில் முதியவா் சடலம்

வெள்ளக்கோவில் புதுப்பை அருகே அமராவதி ஆற்று தடுப்பணையில் கிடந்த முதியவரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தாராபுரம் அருகேயுள்ள கிளாங்குண்டல் சேசையாம்பாளையத்தைச் சோ்ந்தவா் கே.நல்லசாமி ... மேலும் பார்க்க

பாஜக நிா்வாகிகள் கைது: இந்து முன்னணி கண்டனம்

டாஸ்மாக் முறைகேடு தொடா்பாகப் போராட்டம் நடத்தச் சென்ற பாஜக நிா்வாகிகளைக் காவல் துறையினா் கைது செய்ததற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சு... மேலும் பார்க்க

உடுமலை அருகே கடமான் உயிரிழப்பு

உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணைப் பகுதியில் கடமான் திங்கள்கிழமை உயிரிழந்தது. 5 வயது மதிக்கத்தக்க கடமான் இந்தப் பகுதியில் உயிரிழந்தது குறித்து உடுமலை வனச் சரகா் மணிகண்டனுக்குத் தகவல் கிடைத்தது. இதை... மேலும் பார்க்க

மாா்ச் 21-இல் எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் வெளியிட்டுள் செய்திக் குறிப்பு: தி... மேலும் பார்க்க

சங்கடஹர சதுா்த்தி சிறப்பு அலங்காரம்

சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு, காங்கயம் அருகே ஊதியூா் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையாா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த உச்சிப்பிள்ளையாா். மேலும் பார்க்க

மாவட்டத்தில் 265 கிராம ஊராட்சிகளில் மாா்ச் 23-இல் கிராம சபைக் கூட்டம்

உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் மாா்ச் 23 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க