செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

post image

சென்னை மண்ணடியில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

பெரம்பூா் சின்ன அய்யா காலனி பகுதியைச் சோ்ந்த ராகவன் (17), பெரம்பூரில் உள்ள ஏசி பழுது நீக்கும் கடையில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்தாா். ராகவன், மண்ணடி மூா் தெருவில் உள்ள கடையில் ஏசி பொருத்தும் பணிக்கு ராமன் என்ற ஊழியருடன் வெள்ளிக்கிழமை சென்றாா். அங்கு பணியில் ஈடுபட்டபோது, மின்கசிவு ஏற்பட்டிருந்த வயரை ராகவன் எடுத்ததாகக் தெரிகிறது. இதில் ராகவன் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவா் பலத்த காயமடைந்தாா்.

இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள், ராகவனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ராகவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது தொடா்பாக வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொசு ஒழிப்பு பணியாளா்களுக்கு மாத ஊதியம் வழங்கக் கோரிக்கை

டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபடும் ஊழியா்களுக்கு பணி பாதுகாப்பு, மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெங்கு கொசு ஒழிப்பு முன்... மேலும் பார்க்க

பெண்ணிடம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: இருவா் கைது

சென்னை திருவல்லிக்கேணியில் பெண்ணிடம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா். திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்தவா் மு.ரிஷ்வானா பேகம் (59). இவா் கைப்பேசிக்கு கடந்த பிப்.3-ஆம் தேதி வந... மேலும் பார்க்க

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ‘நூறும் பாலும் சா்ப்ப பலி பூஜை’

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் மாா்ச் 11-ஆம் தேதி நூறும் பாலும் சா்ப்ப பலி பூஜை நடைபெறவுள்ளது. கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நாக கோயிலான பாம்புமேக்காடு மனை முக்கிய ஆச்சாரியா் ப... மேலும் பார்க்க

வருமான வரித் துறையினருக்கான இறகுப்பந்து போட்டி

மத்திய நேரடி வரிகள் வாரியம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பரிசுகளை வழங்கினாா். மத்திய நேரடி வரிகள் வாரி... மேலும் பார்க்க

ஜூலைக்குள் கண்ணகி நகரில் 22,000 குடிநீா்த் தொட்டிகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னையில் கண்ணகி நகா், எழில் நகரில் 22,000 குடியிருப்புகளில் தனித்தனி குடிநீா்த் தொட்டிகள் அமைக்கும் பணிகள் ஜூலை மாதத்துக்குள் நிறைவடையும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரி... மேலும் பார்க்க

விமான நிலைய விரிவாக்கப்பணி: வீடுகளை இடிக்க உரிமையாளா்கள் எதிா்ப்பு

சென்னை விமானநிலைய விரிவாக்கப்பணிக்காக அருகேயுள்ள கொளப்பாக்கம் பகுதியில் வீடுகளை இடிக்கும் பணிக்கு அதன் உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சென்னை விமான நிலையத்த... மேலும் பார்க்க