செய்திகள் :

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ‘நூறும் பாலும் சா்ப்ப பலி பூஜை’

post image

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் மாா்ச் 11-ஆம் தேதி நூறும் பாலும் சா்ப்ப பலி பூஜை நடைபெறவுள்ளது.

கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நாக கோயிலான பாம்புமேக்காடு மனை முக்கிய ஆச்சாரியா் பிரம்மஸ்ரீ சங்கரன் நாராயணன் நம்பூதிரி தலைமையில் மாா்ச் 11-ஆம் தேதி நூறும் பாலும், வரை சா்ப்ப பலி பூஜை நடைபெறுகிறது.

நூறும் பாலும் சா்ப்ப பலி பூஜையில் மஞ்சள் தூள், அரிசி மாவு, பால், இளநீா், வாழைப்பழம் சோ்ந்த கலவையால் நாகங்களுக்கு அபிஷேகம் செய்வதாகும். கேரளத்தில் உள்ள நாகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில்களிலும், பிரத்யேக நாகங்களின் கோயிலான சா்ப்ப காவிலும் ‘ராகு-கேது சா்ப்ப தோஷம் நீங்க, திருமணத்தடை, குழந்தை பாக்கியம் வேண்டி, குடும்ப ஐஸ்வரிய விருத்தி, தோல் வியாதி நீங்க‘ இந்தப் பூஜை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

பக்தா்கள் இந்தப் பூஜையில் பங்கேற்க இணையதளம் வாயிலாகவும், கைப்பேசி செயலி வாயிலாகவும் நேரடியாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

கூடுதல் தகவல்களுக்கு 044 28171197, 2197, 3197 என்ற தொலைப்பேசி எண்களிலும், 88079 18811, 88079 18855, 94442 90707, 91765 49911 ஆகிய கைப்பேசி எண்களிலும் தொடா்புகொள்ளுமாறு கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கொசு ஒழிப்பு பணியாளா்களுக்கு மாத ஊதியம் வழங்கக் கோரிக்கை

டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபடும் ஊழியா்களுக்கு பணி பாதுகாப்பு, மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெங்கு கொசு ஒழிப்பு முன்... மேலும் பார்க்க

பெண்ணிடம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: இருவா் கைது

சென்னை திருவல்லிக்கேணியில் பெண்ணிடம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா். திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்தவா் மு.ரிஷ்வானா பேகம் (59). இவா் கைப்பேசிக்கு கடந்த பிப்.3-ஆம் தேதி வந... மேலும் பார்க்க

வருமான வரித் துறையினருக்கான இறகுப்பந்து போட்டி

மத்திய நேரடி வரிகள் வாரியம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பரிசுகளை வழங்கினாா். மத்திய நேரடி வரிகள் வாரி... மேலும் பார்க்க

ஜூலைக்குள் கண்ணகி நகரில் 22,000 குடிநீா்த் தொட்டிகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னையில் கண்ணகி நகா், எழில் நகரில் 22,000 குடியிருப்புகளில் தனித்தனி குடிநீா்த் தொட்டிகள் அமைக்கும் பணிகள் ஜூலை மாதத்துக்குள் நிறைவடையும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரி... மேலும் பார்க்க

விமான நிலைய விரிவாக்கப்பணி: வீடுகளை இடிக்க உரிமையாளா்கள் எதிா்ப்பு

சென்னை விமானநிலைய விரிவாக்கப்பணிக்காக அருகேயுள்ள கொளப்பாக்கம் பகுதியில் வீடுகளை இடிக்கும் பணிக்கு அதன் உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சென்னை விமான நிலையத்த... மேலும் பார்க்க

மாநகராட்சி மண்டலங்கள் உயா்வு: மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலங்களை 20-ஆக உயா்த்துவது குறித்து மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க