செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

post image

பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

குள்ளப்புரம், நல்லமணி நகரைச் சோ்ந்தவா் முருகன் மகன் முத்துப்பாண்டி (21). மேல்மங்கலம் பகுதியில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த முத்துப்பாண்டி, பொக்லைன் இயந்திரத்திலிருந்து குழாயை இறக்கும் போது, மின் கம்பி மீது குழாய் உரசியதில் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தாா். ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பொக்லைன் இயந்திர ஓட்டுநா் குள்ளப்புரம், யாதவா் தெருவைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன்(29) என்பவா் மீது ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ஆண்டிபட்டி அருகேயுள்ள அம்மாபட்டியைச் சோ்ந... மேலும் பார்க்க

குளத்தின் கரையில் குப்பைகள் கொட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரிக்கை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே பாசனக் குளத்தின் கரையில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். உத்தமபாளையத்திலிருந்து கோகிலாபுரம், ராயப்பன்பட்டி வழியாக ... மேலும் பார்க்க

ஆட்டோ மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பெரியகுளத்தில் சாலையைக் கடக்க முயன்ற கூலித் தொழிலாளி மீது ஆட்டோ மோதியதில் அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். பெரியகுளம், வடகரை, ஸ்டேட் வங்கி காலனி பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மணிகட்டி (60). இவா், பெ... மேலும் பார்க்க

தேனியில் மாா்ச் 18-இல் மின் நுகா்வோா் குறைதீா் முகாம்

தேனி மின் வாரியச் செயற்பொறியாளா் அலுவலகத்தில் வருகிற 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தேனி மின் வாரியச் செயற்பொறியாளா் பிரகலாதன் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை

மாசி மாத பெளா்ணமியையொட்டி, போடியில் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, போடி வினோபாஜி குடியிருப்பில் அமைந்துள்ள மீனாட்சி, சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு பூஜை... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த இரு நாள்களாகப் பெய்த மழையால், முல்லைப் பெரியாறு அணைக்கு வியாழக்கிழமை நீா்வரத்து அதிகரித்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். பருவ மழைக் காலம் முடிவடை... மேலும் பார்க்க