செய்திகள் :

மீண்டும் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ்! இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குநர் பேட்டி!

post image

ஜாஸ் பட்லருக்கு பதிலாக மீண்டும் பென் ஸ்டோக்ஸை கேப்டனாக நியமிக்க இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குநர் ராப் கீ விருப்பம் தெரிவித்தார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தேர்வாகாமல் மிக மோசமாக விளையாடி வெளியேறியது. இதனால் அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் தனது கேப்டன் பதவியை ராஜிநாமா செய்தார்.

இங்கிலாந்தின் வெள்ளைப் பந்து (டி20, ஒருநாள்) கிரிக்கெட்டின் அடுத்த கேப்டன் யார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. 2022இல் ஓய்வை அறிவித்த அவர் உலகக் கோப்பைக்காக வந்து விளையாடினார். தற்போது மீண்டும் அவரை அணி தேடுகிறது.

புத்திசாலிதனமான கேப்டன்

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குநர் ராப் கீ கூறியதாவது:

இருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பார்க்க வேண்டும். அதனால் என்னென்ன பாதிப்பு வருகிறதென பார்க்க வேண்டும். நான் பார்த்ததிலேயே பென் ஸ்டோக்ஸ்தான் சிறந்த கேப்டன். அவரை எதிர்பார்ப்பது முட்டாள்தனமாக இருக்கும்.

அவர் மிகவும் புத்திசாலிதனமான கேப்டன். டெஸ்ட்டில் அவரை பார்த்துள்ளோம். அவர் ஆண்களின் தலைவன். வீரர்களிடமிருந்து சிறந்தவற்றை எடுக்கும் ஒரு நபர். அழுத்தமான சூழ்நிலைகளில் ‘இதுதான் சரியான பாதை. செல்லுங்கள்’ என அணியை வழிநடத்துபவர் ஸ்டோக்ஸ்தான்.

ஸ்டோக்ஸ் சிறந்த அணித்தலைவர்

அணித்தலைவராக இருக்க ஒரு தகுதி வேண்டும். அது ஸ்டோக்ஸ்டிடம் சிறப்பாக இருக்கிறது. அவர் சிறந்த வீரர் மட்டுமில்லாமல் சிறந்த தலைவரும் ஆவார்.

பென் ஸ்டோக்ஸுக்கு வேலைப் பளு இல்லாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மற்ற விஷயங்களிலும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.

கேப்டனாக யாரைத் தேர்ந்தெடுத்தால் என்னவாகும்? தவறாக சென்றாலும் சரியாக சென்றாலும் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்பதை நான் முடிவு செய்தாக வேண்டும் என்றார்.

நியூஸி. சுழலில் இந்தியா திணறல்!

துபை : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணி இந்திய பேட்ஸ்மென்களை ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தியுள்ளது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: அரைசதம் கடந்து ரோஹித் சர்மா அதிரடி!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று (மார்ச் 9) நடைபெற்று... மேலும் பார்க்க

ஃபீல்டிங்கில் மோசமான சாதனை படைத்த இந்திய அணி!

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஃபீல்டிங்கில் மோசமான சாதனை படைத்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று (மார்ச் 9) நடைபெற்று வருகிறது. இந்தியா மற்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று (மார்ச் ... மேலும் பார்க்க

பிரையன் லாராவின் மோசமான சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாராவின் மோசமான சாதனையை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன... மேலும் பார்க்க

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளராக மேத்யூ வேட்!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில... மேலும் பார்க்க