Pad Girl: "கல்வியை மேம்படுத்த முதல் அடி அரசியல்தான்" -ராகுல் காந்தி பாராட்டிய பீ...
மீன் வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
மீன் வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மீன் வளத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக, மீன் வளத் துறை உதவி இயக்குநா் எஸ்.நாதன் தெரிவித்ததாவது:
திண்டுக்கல் மாவட்டம், மீன் வளம், மீனவா் நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் மீன் வளா்ப்புத் தொழில் செய்துவரும் விவசாயிகள் தங்களது மீன் பண்ணைகளை பதிவு செய்து பல்வேறு அரசு மானியத் திட்டங்களைப் பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை மீன்வள விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் மானியம் வழங்கப்படவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மீன் வள விவசாயிகள், இந்த திட்டத்தின் கீழ் மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கான உள்ளீட்டு மானியத்தைப் பெறலாம். இந்தத் திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கும், விண்ணப்பங்கள் பெறவும், மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகம், 80 அடி ரோடு, நேருஜி நகா், திண்டுக்கல் - 624 001 என்ற முகவரியில் செயல்படும் மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.
மேலும், 9751664565, 7598236815, 9384824386 ஆகிய எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.