செய்திகள் :

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

post image

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது.

முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிகாரிகள் கூறிய ஒரு நாள் கழித்து ஆம் ஆத்மி கட்சியின் இந்த எதிா்வினை வந்துள்ளன.

தில்லியில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் கிராரியைச் சோ்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ அனில் ஜா கூறியதாவது: பாஜக எப்போதும் எளிமையான வாழ்க்கையை ஆதரித்து வருவதாக கூறியது. பிற தலைவா்களின் செலவுகளுக்காக விமா்சித்து வந்தது. ஆனால் இப்போது, ​தில்லி முதல்வருக்கு 15 அறைகள் கொண்ட இரண்டு பெரிய பங்களாக்கள் கட்டப்படுகிறது எனவும், புதுப்பித்தல் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்சாரம் இயங்க 14 சக்திவாய்ந்த ஜெனரேட்டா்களும் இந்த சொத்தில் இருக்கும்.

முன்னாள் முதல்வா் கேஜரிவாலின் செலவுகளை ஒரு காலத்தில் விமா்சித்த பாஜக தலைவா்கள் இப்போது அமைதியாக இருக்கின்றனா். மக்கள் இதை ‘மாயா மஹால்’ (மாயைகளின் அரண்மனை) என்று அழைக்கின்றனா்.

பாஜக ஆளும் பிற மாநில முதல்வா்களும் இதே போல் அரண்மனைகளில் இருக்கின்றனா். உத்தரகண்டில் உள்ள ‘ரங்-மஹால்’ (வண்ண அரண்மனை) மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள ‘ஐஸ்வா்ய-மஹால்’ (ஆடம்பர அரண்மனை) போன்ற ஆடம்பரமான வீடுகளில் வசிக்கின்றனா். ஒரு காலத்தில் எளிமையான காரில் காணப்பட்ட தில்லி முதல்வா், இப்போது 13 வாகனங்களின் வாகனத் தொடரணியுடன் நகா்கிறாா் என தெரிவித்தாா்.

தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்

எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது மீண்டுமொரு முறை கடுமையான விமர்சனங்களை சுமத்தியுள்ளார்.முன்னதாக, அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய முறைகேட்டில்... மேலும் பார்க்க

பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: கர்நாடக கிரிக்கெட் சங்கத்தில் அடுத்தடுத்து ராஜிநாமா!

பெங்களூரு: ஐபிஎல் 2025 சாம்பியன் பட்டத்தை வென்ற களிப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் ஐபில் கோப்பையுடன் பெங்களூரு வீதிகளில் புதன்கிழமை(ஜூன் 4) நடத்திய பேரணியில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர... மேலும் பார்க்க

நிதி ஆணைய உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் நியமனம்

புது தில்லி: 16-ஆவது நிதி ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் டி. ரபீ ஷங்கர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த பதவியில் நிதி ஆணையம் தமது அறிக்... மேலும் பார்க்க

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹிமாசலப் பிரதேசம் சென்றுள்ள அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையொ... மேலும் பார்க்க

பையில் துப்பாக்கி: உ.பி.யில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி நபர் கைது !

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேச மாநிலம், ராமராஜ் பகுதியில் உள்ள ஜமால்பூர் கால்வாய் கல்வெர்ட் அருகே சந்தேக நபர் ... மேலும் பார்க்க

சபரிமலையில் விமான நிலையம்: திங்கள்கிழமை சர்வே பணிகள் ஆரம்பம்!

திருவனந்தபுரம்: சபரிமலையில் விமான நிலையம் கட்டமைக்கும் பணியில் முதல்கட்டமாக சர்வே பணிகள் திங்கள்கிழமை(ஜூன் 9) தொடங்குகின்றன. இதற்காக ஆய்வுக் குழுவினர் விமான நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்... மேலும் பார்க்க