செய்திகள் :

முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரம் விசிட்: கருப்புக் கொடி காட்ட முயன்றவர் கைது - என்ன நடந்தது?

post image

நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்யவும் இராமநாதபுரத்திற்கு வருகை தந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இடைக்காட்டூர் தேவாலயத்தில் முதலமைச்சர்
இடைக்காட்டூர் தேவாலயத்தில் முதலமைச்சர்

நேற்று இரவு விமானம் மூலம் மதுரை வந்த முதலமைச்சரை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் பிரவீன்குமார் ஆகியோர் உள்ளிட்டவர்களும், மக்கள் பிரதிநிதிகளும், கட்சியினரும் வரவேற்றனர்.

தொண்டர்களின் உற்சாகமான வரவேற்பைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக இராமநாதபுரம் கிளம்பிய முதலமைச்சர், செல்லும் வழியில் சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் ஒரு கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

போராட்ட அறிவிப்பு
போராட்ட அறிவிப்பு

பின்பு அங்கிருந்து கிளம்பிய முதலமைச்சரை இராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனூரில் அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ ஆகியோர் ஏற்பாட்டில் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து முதலமைச்சர் இராமநாதபுரம் சென்றார்.

இதற்கிடையே முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ள இராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு `ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி'யின் பெயரை சூட்டக் கோரிக்கை வைத்தும் அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்காததால் முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்று அறிவித்திருந்த தென்தமிழர் கட்சி நிர்வாகி பால முரளியை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதலமைச்சருக்கு வரவேற்பு
முதலமைச்சருக்கு வரவேற்பு

முன்னாள் முதல்வர் `கலைஞர் கருணாநிதி' பெயர் சூட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தைத் திறந்து வைப்பதோடு இராமநாதபுரத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் முதலமைச்சர் கலந்துகொள்கிறார்.

VIJAY - DMK Underground Dealing ஆ? - திருமா ஆவேசத்தின் பின்னணி | MODI BJP TVK TRUMP| Imperfect Show

* காந்தியின் வழிகளை தொடர்ந்து பின்பற்றுவோம் - பிரதமர் மோடி* ஒற்றுமையே நமது வலிமை - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் * ஆர்எஸ்எஸ் நூற்றாண்டுக்கு அஞ்சல் தலை வெளியிடுவதா? -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்* த... மேலும் பார்க்க

``இந்தியா எண்ணெய் வாங்கினாலும், வாங்காவிட்டாலும் சிக்கல்தான்'' - ரஷ்ய அதிபர் சொல்வது என்ன?

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு இந்தியா மீது தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நெருக்கடிகளை ஏற்படுத்திவருகிறார். இதற்கு எதிராக ரஷ்ய அதிபர் புதின் அமெரிக்காவை எச்சரித்திருக்கிறார். ரஷ்யா... மேலும் பார்க்க

`அமெரிக்க மக்களுக்கு 1,000-2,000 டாலர்களாக வரிகளை பிரித்து தருவேன்' - மோடியை ஃபாலோ செய்யும் ட்ரம்ப்?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்கா உடன் வர்த்தகம் செய்யும் பிற நாடுகளுக்கு 'வரி' அறிவித்துள்ளார். அனைவரும் அறிந்ததே. இதன் மூலம் அமெரிக்காவிற்கு பில்லியன் கணக்கில் டாலர்கள் வந்து குவியும் என்று கூறுகிற... மேலும் பார்க்க

கேரளா: ``RSS மதம் பார்ப்பது இல்லை, நானே சாட்சி" - முழுநேர ஊழியரான Ex-DGP ஜேக்கப் தாமஸ் சொல்வதென்ன?

1925-ம் ஆண்டு விஜயதசமி தினத்தில் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கேரளா மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. விஜயதசமி தினத்தை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் அ... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: "அதிகாரிகள் பொய் சொல்கிறார்கள்; அரசுதான் பொறுப்பு" - திமுக-வை சாடும் இபிஎஸ்

கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.இந்த சம்பவத்தில் நீதிமன்ற விசாரணை, அரசு சார்பில் அமைக்கப்பட்ட ஓய்வுபெற... மேலும் பார்க்க

RSSக்கு புகழாரம் - ஆளும் தி.மு.க அரசு மீது கடும் விமர்சனம்; ஆளுநர் ஆர்.என்.ரவி அட்டாக்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கும் இடையேயான அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார். அதில், "1925-ல் டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் தொடங்கிய ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்... மேலும் பார்க்க