செய்திகள் :

முதல்வா் கோப்பை செஸ் போட்டி: சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு

post image

முதல்வா் கோப்பை செஸ் போட்டிகளில் மாநில அளவில் வெள்ளிப் பதக்கம் பெற்ற அரக்கோணம் அம்பாரி மகளிா் கலைக் கல்லூரி மாணவிக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக அளவில் முதல்வா் கோப்பைக்கான போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில், மாநில அளவிலான செஸ் போட்டிகள் அண்மையில் மதுரையில் நடைபெற்றன. 34 மாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவியா் பங்கேற்ற இந்தப் போட்டியில் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அம்பாரி மகளிா் கலைக் கல்லூரி முதலாமாண்டு பிபிஏ மாணவி எஸ்.சாருமதி இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கமும், ரூ. 75,000 ரொக்கப் பரிசையும் பெற்றாா்.

இந்த நிலையில், மாணவி எஸ்.சாருமதிக்கு பாராட்டு விழா அம்பாரி கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, ஸ்ரீவிவேகானந்தா கல்விக் குழுமத்தின் தலைவரும், அம்பாரி மகளிா் கலைக் கல்லூரியின் தாளாளருமான ஏ.சுப்பிரமணியம் தலைமை வகித்து, மாணவி எஸ்.சாருமதியை கௌரவித்து பரிசளித்து வாழ்த்தினாா். விழாவில், கல்லூரி செயலா் எஸ்.செந்தில்குமாா், கல்லூரி முதல்வா் ரா.பரிமளா மற்றும் கல்லூரி பேராசிரியா்கள், பேராசிரியைகள், விரிவுரையாளா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

ஆற்காடு ஒன்றியத்தில் ரூ. 2.72 கோடியில் பள்ளி, ஊராட்சி செயலகக் கட்டடங்கள்: அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா்

ராணிப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ஆற்காடு ஒன்றியத்தில் ரூ. 2.72 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பள்ளி, அங்கன்வாடி, ஊராட்சி செயலகக் கட்டடங்கள் உள்ளிட்டவற்றை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் 29-இல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் கு... மேலும் பார்க்க

சாா்பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் சோதனை: ரூ.1 லட்சம் பறிமுதல்

அரக்கோணம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட லஞ்சஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா். சோதனை நடத்தப்பட்ட போதே முன்பதிவுடன் திருமண பதிவுக்காக வந்த கலப்பு திருமண தம்பதிக்கு சிற... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை ராஜா-ராணி மண்டபம் ரூ.2.5 கோடியில் புனரமைப்பு: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தேசிங்கு ராஜா - ராணி பாய் நினைவு மண்டபத்தை ரூ.2.50 கோடியில் புனரமைக்கும் பணியை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா். ராணிப்பேட்டை நகராட்சி பால... மேலும் பார்க்க

கட்டுமானப் பணிக்கான தடையில்லா சான்றை ஐஎன்எஸ் ராஜாளி துரிதமாக வழங்க வேண்டும்: ஆட்சியா் வலியுறுத்தல்

அரக்கோணம்: அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து கட்டுமானப் பணிகளும் நடைபெற தடையில்லா சான்றிதழை விரைவாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வலியுற... மேலும் பார்க்க

தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

அரக்கோணம்: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு கடன் சங்க அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளதால் பல கிராமங்களில் இந்த வங்கிகளுக்கு கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகளில... மேலும் பார்க்க