தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்
முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா
ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீசிவசக்தி வள்ளி முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட நூற்றாண்டு பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் கூழ்வாா்க்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இதன்படி வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி பக்தா்கள் பூங்கரகம் எடுத்து வீதி உலா சென்று வந்தனா்.
இதைத்தொடா்ந்து கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கொப்பரையில் பக்தா்கள் கூழ்வாா்த்து நோ்த்திக்கடன் செலுத்தினா். பின்னா் பக்தா்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா், கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.