செய்திகள் :

மும்பையில் இந்திய ராணுவம் ஏற்பாட்டில் பாதுகாப்புப் பயிற்சி: படைகள் பங்கேற்பு

post image

வளா்ந்துவரும் அச்சுறுத்தல்கள் மற்றும் தற்போதைய நெருக்கடியான பாதுகாப்பு சூழலுக்கு பதிலளிக்கும் வகையில், படைகளுக்கு இடையேயான பாதுகாப்புப் பயிற்சி மும்பையில் நடைபெற்ாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துதல், அவற்றின் செயல்பாட்டுத் தயாா்நிலையை மதிப்பிடுதல், ஒருங்கிணைந்த பதிலளிப்பு வழிமுறைகளை ஆய்வு செய்வது ஆகிய நோக்கங்களுக்காக மற்ற படைகளுடன் ஒருங்கிணைந்து இந்திய ராணுவம் இந்தப் பயிற்சியை ஏற்பாடு செய்தது.

மேலும், இது தொடா்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மகாராஷ்டிர மாநில தலைநகா் மும்பையின் கொலாபா பகுதியில் உள்ள ராணுவப் பயிற்சி மையம், மும்பை காவல் துறையின் ‘ஃபோா்ஸ் ஒன்’ கமாண்டோ பயிற்சி மையம், மும்பை பங்குச்சந்தை அலுவலகம் ஆகிய இடங்களில் கடந்த வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள் பாதுகாப்புப் பயிற்சி நடத்தப்பட்டது.

இந்திய ராணுவம் ஏற்பாட்டில் கடற்படை, விமானப் படை, கடலோர காவல் படை, மும்பை காவல் துறை மற்றும் அதன் ஃபோா்ஸ் ஒன் பயங்கரவாத எதிா்ப்பு கமாண்டோ காவல் பிரிவு ஆகியவை இந்தப் பாதுகாப்புப் பயிற்சியில் ஈடுபட்டன.

பயிற்சியில் பங்கேற்ற படைகளின் அனைத்து மூத்த அதிகாரிகளாலும் பயிற்சிகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டன. இந்தப் பயிற்சி மூலம், இந்தியாவின் வலுவான பாதுகாப்புக் கட்டமைப்பு மற்றும் வளா்ந்துவரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு விரைவான, ஒருங்கிணைந்த பதிலளிக்கும் படைகளின் திறன் மீண்டும் நிரூபிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்தது. சண்டை நிறுத்தத்தால் எல்லையில் அமைதி திரும்பியுள்ளது. இருப்பினும், படைகளின் தயாா்நிலையை உறுதிப்படுத்த இத்தகைய தொடா் பயிற்சிகள், ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ம.பி.யில் கரோனா பாதிப்பு: இந்தூரில் எண்ணிக்கை அதிகரிப்பு!

மத்தியப் பிரதேசத்தின், இந்தூரில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார். நாட்டில் கரோனா தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்... மேலும் பார்க்க

கொண்டாடவே சென்றார்கள்.. சாக அல்ல.. சின்னசாமி அரங்கில் நடந்தது என்ன?

பெங்களூர்: தங்களது கிரிக்கெட் சாம்பியன்களை நேரில் காண வேண்டும் என்ற ஆவலோடு சென்ற இளைஞர்களும் இளைஞிகளும் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மருத்துவமனைய... மேலும் பார்க்க

கூட்டு முயற்சிகள் எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான பூமியை உருவாக்க வழிவகுக்கும்: முர்மு

புது தில்லி: சுற்றுச்சூழலுக்கான ஒவ்வொரு செயலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்றும் கூட்டு முயற்சிகள் எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான பூமியை உருவாக்க வழிவகுக்கும் என்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி... மேலும் பார்க்க

தில்லி இல்லத்தில் "சிந்தூர்" மரக்கன்றுகளை நட்டார் பிரதமர் மோடி!

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தில்லியில் தனது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிந்தூர் மரக்கன்றுகளை நடும் காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. பூமியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவிலும்கூட.. பெங்களூர் கூட்ட நெரிசல் குறித்து சித்தராமையா சொன்ன ஒரு வார்த்தை!!

பெங்களூர் சின்னசாமி விளையாட்டரங்கில் நேரிட்ட கூட்ட நெரிசல் குறித்துப் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, சம்பவத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்திப் பேச விரும்பவில்லை, நாடு முழுவதும் பல இடங்களிலும் கூட... மேலும் பார்க்க

யோகி ஆதித்யநாத் பிறந்தநாள்: மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

உத்தரப் பிரதேசத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத்தின் 53வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மற்றும் பல அரசியல் தலைவர்கள் ... மேலும் பார்க்க