செய்திகள் :

மும்பை: `காவல் நிலையம் அருகே போதைப்பொருள் தொழிற்சாலை; 5 ஆண்டுகள் விற்பனை ஜோர்' - போலீஸார் அதிர்ச்சி

post image

மும்பையில் எம்.டி. எனப்படும் ஒருவகையான போதைப்பொருளின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. இந்த போதைப்பொருளை ஆய்வுக்கூடத்தில் எளிதில் தயாரித்துவிடலாம் என்பதால் சிலர் வீடுகளில் இதனை தயாரித்து விற்பனை செய்கின்றனர்.

ஏற்கெனவே இப்போதைப்பொருளை தயாரித்த தொழிற்சாலைகள் புனே, மும்பை, சோலாப்பூர் பகுதியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

சமீபத்தில் இம்மாத தொடக்கத்தில் மும்பை திலக் நகர் பகுதியில் எம்.டி. போதைப்பொருளுடன் மொஹ்சின் சையத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இக்பால் ஷேக் மற்றும் மெஹ்தாப் கான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ரெய்டு
ரெய்டு

மூன்று பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் சோஹைல் கான் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு காட்கோபர் பகுதியில் கைது செய்யப்பட்டார்.

இவர் கடந்த 5 ஆண்டுகளாக போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்தார். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மும்பை அருகில் உள்ள நாலாசோபாராவில் இருக்கும் பெல்ஹார் என்ற இடத்தில் போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சித்திக் என்பவர்தான் மேற்கண்டவர்களுக்கு போதைப்பொருளை சப்ளை செய்து வந்தார். இதையடுத்து அவரை பிடித்து விசாரித்தபோதுதான் போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலை இருக்கும் இடம் தெரிய வந்தது.

உடனே அந்த இடத்தில் போலீஸார் ரெய்டு நடத்தினர். அங்கு 6 கிலோ எம்.டி. போதைப்பொருள் மற்றும் அது தயாரிக்க தேவையான ரசாயன பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.13 கோடியாகும்.

கைது
கைது

1400 சதுர அடியில் பெரிய அளவில் போதைப்பொருளை தயாரிக்கும் வகையில் இயந்திரங்களை பொருத்தி இருந்தனர். ஒவ்வொரு மாதமும் 50 கிலோ போதைப்பொருள் தயாரித்து மும்பை முழுவதும் பி.எம்.டபிள்யூ. கார்களில் எடுத்துசென்று விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதில் வேடிக்கை என்னவென்றால், போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை இருக்கும் இடத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில் தான் போலீஸ் நிலையம் இருந்தது. ஆனாலும் போலீஸாரால் அந்த போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து சீனியர் அதிகாரி ஜிதேந்திரா பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் அத்தொழிற்சாலை இருந்த இடத்தின் உரிமையாளருக்கு இதில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

டிஜிட்டல் கைது: "மகனின் திருமணம் நல்லபடியாக நடக்கணும்னுதான்" - பெங்களூரு பெண்ணிடம் ரூ.32 கோடி மோசடி

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் முதியவர்களை ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. கைது செய்ய வீட்டிற்கு போலீஸாரை அனுப்புவோம் என்று பெண்களை மிர... மேலும் பார்க்க

சேலம்: திருமணம் தாண்டிய உறவு விவகாரத்தில் கொலை - 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள உம்பிளிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி(60). கடந்த 2000-ம் ஆண்டு நல்லதம்பிக்கு 35 வயது இருந்தபோது, உம்பிளிக்கம்பட்டி பகுதியில் வசித்து வந்துள்ளார். அப்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: பட்டியல் சமூக மாணவரை தாக்கிய மாற்று சமூக மாணவர்கள் - அரசு விடுதியில் அரங்கேறிய அவலம்

ராமநாதபுரம் அம்மா பூங்கா பகுதியில் மாணவர்களுக்கான அரசு சமூக விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் பல்வேறு சமுதாயத்தினை சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளிகளில் பயின்று வருகி... மேலும் பார்க்க

``டெல்லியில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதல்'' - NIA விசாரணை என்ன சொல்கிறது?

டெல்லியில் கடந்த வாரம் செங்கோட்டை அருகில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர். இக்குண்டு வெடிப்பில், வெடிகுண்டு இருந்த காரை ஓட்டி வந்த டாக்டர் உமர் உல் நப... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: ``திருமணம் நடைபெற 16 நாள் குழந்தையை பலியிட்ட 4 பெண்கள்'' - பெற்றோர்கள் அதிர்ச்சி

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் பூனம்ராம். இவரது மனைவி சுமன். சுமனுக்கு அங்குள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்திருந்தது.ஆனால், பூனத்தின் சகோதரிகள் ரமேஷ்வரி, மம்தா, கீதா, மஞ்சு... மேலும் பார்க்க

காங்கேயம்: சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை; போலி வார்டன் போக்சோவில் கைது

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவியர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்குப் பின்புறம் தமிழக அரசின்... மேலும் பார்க்க