செய்திகள் :

மும்பை: 12 மாடி கட்டிடத்தில் தீ விபத்து; 5 பேர் பலி, 10 பேருக்கு தீவிர சிகிச்சை -நள்ளிரவில் சோகம்

post image

மும்பை அருகிலுள்ள நவிமும்பை வாஷி பகுதியில் செக்டர் 14-ல் இருக்கும் ரஹஜா ரெசிடென்சி அடுக்குமாடி கட்டிடத்தில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

கட்டிடத்தின் 10வது மாடியில் வசிக்கும் கமலா ஜெயின் வீட்டில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. நள்ளிரவில் திடீரென மின்தடை ஏற்பட்டது, அதனைத் தொடர்ந்து தீ பிடித்து கொண்டது.

தீவிபத்தில் இறந்த வேதிகா குடும்பம்
தீவிபத்தில் இறந்த வேதிகா குடும்பம்

இதனால் அந்த வீட்டில் இருந்த கமலா ஜெயின் மகன் உட்பட குடும்பத்தினர் அனைவரும் பயத்தில் கட்டிடத்தின் மாடிப்பகுதிக்கு சென்றுவிட்டனர். ஆனால் 84 வயதாகும் கமலா ஜெயின் படுத்த படுக்கையில் இருந்தார். அவரை மீட்டு வெளியே அழைத்து செல்ல முடியவில்லை.

10-வது மாடியில் ஏற்பட்ட தீ மேல் மாடிகளுக்கும் பரவியது. 12வது மாடியில் உறங்கிக்கொண்டிருந்த சுந்தர் பாலகிருஷ்ணன், பூஜா ராஜன் மற்றும் அவர்களது மகள் வேதிகா ஆகியோர் புகைமண்டலத்தில் சிக்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர்.

கமலா ஜெயினும் இத்தீ விபத்தில் இறந்தார். தீ விபத்து குறித்து கேள்விப்பட்டதும், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ மற்றும் புகைமண்டலத்தில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.

10, 11, 12வது மாடிகளில் வசித்தவர்கள் பக்கத்து கட்டிட மாடிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தீ விபத்து
தீ விபத்து

10 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 10வது மாடிக்கு கீழே இருந்த வீடுகளில் வசித்தவர்கள், தீ விபத்து ஏற்பட்டவுடன் தங்களது வீடுகளை காலி செய்துவிட்டு வெளியில் சென்றுவிட்டனர்.

தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால் தீபாவளிக்கு வைத்த விளக்கு அல்லது ஏ.சி-யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தங்களுக்கு அதிகாலை 12.40க்குத்தான் தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததாக தீயணைப்புத்துறை அதிகாரி புருஷோத்தம் தெரிவித்தார். விபத்தில் இறந்த வேதிகா குடும்பம் கேரளாவை சேர்ந்தது ஆகும்.

கனமழையால் இடிந்து விழுந்த வீட்டுச் சுவர்– உணவருந்தியபோதே தாய், மகள் உயிரிழந்த சோகம்

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதால், கடந்த 16-ம் தேதி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துவருகிறது. இதற்கிடையில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகம் மற்றும் புதுச... மேலும் பார்க்க

வங்காளதேசம்: டாக்கா விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து; விமான சேவைகள் பாதிப்பால் பயணிகள் அவதி!

வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் கார்கோ முனையத்தில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.சரியாக பிற்பகல் 2:30 மணியளவில்... மேலும் பார்க்க

`வானமே இடிஞ்சு விழுந்த மாதிரி இருந்துச்சி’ - கடலூரில் மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று காலை பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த சூழலில் வேப்பூரை அடுத்த அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். ... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: நொடியில் தீப்பற்றி எரிந்த பேருந்து, 20 பயணிகள் தீயில் கருகி பலி - என்ன நடந்தது?

ஜெய்சல்மாரில் நடந்த கொடூர விபத்தினால் பேருந்தில் இருந்த 20 பேர் உயிருடன் எரிந்து மரணமடைந்துள்ள நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மதியம் 3 மணியளவில் ஜெய்சல்மாரிலிருந்து ஜோத்பூர் புறப்பட்ட ப... மேலும் பார்க்க

தடுப்புக் கம்பி மீது மோதிய ரயில் எஞ்சின் மின் கருவி; விபத்திலிருந்து தப்பிய ராமேஸ்வரம் ரயில்

ராமநாதபுரம் - ராமேஸ்வரம் வழித்தடத்தில் டீசல் எஞ்ஜின் பொறுத்திய ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த வழிதடம் மின்சார வழி தடமாக மாற்றப்பட்ட நிலையில் கடந்த மாதம் 13-ம் தேதி முதல் மின்சார ரயில் எஞ்சின்களை கொ... மேலும் பார்க்க

வால்பாறை: வீடு புகுந்து தாக்கிய யானை - ஒன்றரை வயது குழந்தை, பாட்டி உயிரிழந்த சோகம்

கோவை மாவட்டம், வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ளது. அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் வால்பாறை நகரம், சுற்றுவட்டாரத்தில் உள்ள எஸ்டேட் பகுதிகளில் யானை, கரடி, காட்டு மாடு, புலி, சிறுத்தை ... மேலும் பார்க்க