செய்திகள் :

மூணாறுக்குப் பள்ளிச் சுற்றுலா; காவல் நிலையத்தில் கஞ்சா புகைக்க தீப்பெட்டி கேட்ட மாணவர்கள்!

post image
கேரளாவில் ஆசிரியர்களுடன் சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள், கஞ்சா பீடி பற்றவைக்கத் தீப்பெட்டிக்காக ஒர்க ஷாப் கட்டடம் என்று நினைத்து உள்ளூர் காவல் நிலையத்துக்குள் நுழைந்த சம்பவம், வெளியில் தெரியவந்திருக்கிறது.

முன்னதாக, திருச்சூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய 100 பேர் கொண்ட குழு மூணாறுக்கு சுற்றுலா சென்றிருந்தது. இந்தக் குழு, கடந்த திங்களன்று அடிமாலியில் ஒரு ஹோட்டலில் உணவுக்காகக் காத்திருந்த வெளியில், அந்தக் குழுவிலிருந்து சில மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி கஞ்சா புகைக்க முடிவுசெய்தனர்.

School

அதன்படி, ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த கஞ்சாவை பீடியாகச் சுருட்டி புகைக்கத் தயாரானபோது தங்களிடம் தீப்பெட்டி இல்லை என்பதை அவர்கள் உணர்ந்தனர். அதையடுத்து, அருகில் வாகனங்கள் குவிக்கப்பட்டிருந்த இடத்திலிருந்த பழைய கட்டடத்தை அந்த மாணவர்கள் கண்டனர். அதை ஏதோ ஒர்க் ஷாப் என்று நினைத்த அவர்கள், கேஷுவலாக அங்கு நுழைந்து தீப்பெட்டி கேட்டபோதுதான், அங்கு சீருடையிலிருந்த மற்ற போலீஸ் அதிகாரிகளைக் கண்டு அது காவல் நிலையம் என்று உணர்ந்தனர்.

பின்னர், அங்கிருந்து மாணவர்கள் ஓட முயன்றபோது, அதிகாரிகள் அவர்களைப் பிடித்தனர். இது குறித்துப் பேசிய போலீஸ் அதிகாரி பி. ராகேஷ், ``மாணவர்கள் இதை ஒரு ஒர்க ஷாப் என்று நினைத்து, பின் கதவு வழியாக அலுவலகத்துக்குள் நுழைந்து, ஓய்வெடுக்கும் அதிகாரிகளிடம் தீப்பெட்டியைக் கேட்டனர். பிறகு, சீருடையிலிருந்த அதிகாரிகளை அவர்கள் கவனித்தபோதுதான் தங்களுடைய தவறை உணர்ந்தார்கள்" என்று தெரிவித்தார்.

கைது

இதில், இரண்டு மாணவர்களிடமிருந்து 5 கிராம் கஞ்சா மற்றும் ஒரு கிராம் ஹாஷிஷ் ஆயிலைக் கைப்பற்றிய அதிகாரிகள், அவ்விருவர் மீதும் போதைப்பொருள் மற்றும் மனநோய் தடுப்புச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்தனர். மற்ற மாணவர்கள் ஆசிரியர்களுடன் அனுப்பிவைக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி: சிறுமிகள் பாலியல் வன்கொடுமை... கர்ப்பம்! - தலைமை ஆசிரியர் உட்பட இருவர் மீது குண்டாஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆதி திராவிடர் நல ஆரம்பப் பள்ளியில், R.R குப்பத்தைச் சேர்ந்த 52 வயதான துரை அரசன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதே... மேலும் பார்க்க

Fake Website: `99% ஆஃபரில் ஆப்பிள், சாம்சங் கேட்ஜெட்கள்' - மோசடியில் சிக்காமல் தப்புவது எப்படி?

ஆண்டுதோறூம் கிரேட் இண்டியன் ஃபெஸ்டிவல், பிக் பில்லியன் டேஸ் என்று ஆன்லைன் தளங்கள் ஆஃபர் அறிவிக்கும் சில தினங்கள் இருக்கின்றன. தீபாவளி, பொங்கல் என விழாக்காலங்களில் சில தள்ளுபடிகள் இருப்பது வழக்கம்தான்.... மேலும் பார்க்க

சென்னை: வீட்டிலேயே போதைப்பொருள் தயாரித்த மாணவர்கள் - சிக்கியது எப்படி?

போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வந்தாலும், அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இந்தச் சூழலில் சென்னையில் கல்லூரி... மேலும் பார்க்க

அரசு வேலை; போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி... சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை..!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளாராக ஏசு ராஜசேகரன், கடந்த 8 மாதங்களாக பணியில் இருந்தவர். இவர், கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்த போது அரச... மேலும் பார்க்க

மது போதையில் பேருந்தின் ஸ்டியரிங்கில் அமர்ந்து ரகளை; திருப்பூர் இளைஞர் கைது; வைரலாகும் வீடியோ

கோவையிலிருந்து திருப்பூர் நோக்கி அரசுப் பேருந்து கடந்த 21-ஆம் தேதி வந்து கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை ஓட்டுநர் ரகுராம் என்பவர் ஓட்டி வந்தார். திருப்பூர் காந்தி நகர் சிக்னல் அருகே வந்தபோது, அவ்வழியே ... மேலும் பார்க்க

Irfan issue: இர்ஃபான் வீடியோ விவகாரம்; மருத்துவமனை மீது அதிரடி நடவடிக்கை..!

வெவ்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார் யூடியூபர் இர்ஃபான்.சில மாதங்களுக்கு தனக்கு என்ன குழந்தை பிறக்கப்போகிறது என்பதை வெளிநாட்டுக்குச் சென்று அறிந்துக் கொண்ட இர்ஃபான் அதனை `Gender Reveal' என... மேலும் பார்க்க