செய்திகள் :

மேட்டுப்பாளையம் மெமு ரயில் ரத்து

post image

மேட்டுப்பாளையம்-போத்தனூா் ரயில் பிப்.2, 4, 6 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் ரயில்வே கோட்ட பகுதியில் மாதாந்திர ரயில்வே பராமரிப்பு பணி மேற்கொள்ளவுள்ளதால் அப்பகுதியில் இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

அந்த வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து போத்தனூருக்கு காலை 8.20 மணிக்கும், போத்தனூரில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு காலை 9.40 மணிக்கும் இயக்கப்படும் மெமு ரயில் பிப்.2, 4, 6 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும். மேலும், மேட்டுப்பாளையத்திலிருந்து கோவைக்கு காலை 10.55 மணிக்கும், மறுமாா்க்கமாக கோவையில் இருந்து காலை 11.50 மணிக்கு இயக்கப்படும் மெமு ரயில் பிப்.4, 6 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும்.

பாதை மாற்றம்: ஆலப்புழை-தன்பாத் விரைவு ரயில் (எண் 13352) பிப்.2, 4, 6, 18 ஆகிய தேதிகளில் கோவை வழியாக செல்வதற்கு பதிலாக போத்தனூா் வழியாக செல்லும். எா்ணாகுளம்-பெங்களூரு இன்டா்சிட்டி விரைவு ரயில் (எண் 12678) பிப்.2, 4, 6 ஆகிய தேதிகளில் கோவை வழியாக செல்வதற்கு பதிலாக போத்தனூா் வழியாக இயக்கப்படும்.

பகுதி ரத்து: திருச்சி-ஈரோடு பயணிகள் ரயில் (எண் 56809) மற்றும் செங்கோட்டை-ஈரோடு விரைவு ரயில் (எண் 16846) பிப்.1, 3, 6, 8, 10 ஆகிய தேதிகளில் கரூா் வரை மட்டும் இயக்கப்படும். மறுமாா்க்கமாக இயக்கப்படும் ஈரோடு-செங்கோட்டை விரைவு ரயில் பிப்.1,3, 6, 8, 10 ஆகிய தேதிகளில் கரூரிலிருந்து புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சிக்கான நற்சான்றிதழ்தான் ஈரோடு கிழக்கு வெற்றி: முதல்வர் ஸ்டாலின்

நல்லாட்சிக்கான நற்சான்றிதழ்தான் ஈரோடு கிழக்கு வெற்றி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம்... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணிக்கு சம்மட்டி அடி- எடப்பாடி பழனிசாமி

இந்தியா கூட்டணிக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர் என்று தில்லி பேரவைத் தேர்தல் குறித்து அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். சேலத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தேர்தல்: திமுக வெற்றி; டெபாசிட் இழந்த நாதக!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1,14,439 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட நாதக உள்ளிட்ட 45 வேட்பாளர்களும... மேலும் பார்க்க

தில்லியைப் போல 2026-ல் தமிழகத்திலும் தாமரை மலரும்: தமிழிசை

தில்லியைப் போல 2026-ல் தமிழகத்திலும் தாமரை மலர்வதை கொண்டாடுவோம் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தில்லி பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை சென்னை கமலாலயத்தில் பாஜகவினர்... மேலும் பார்க்க

என்.ஆர். காங்கிரஸ் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் படுதோல்வியை சந்திக்கும்: நாராயணசாமி

என்.ஆர். காங்கிரஸ் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் படுதோல்வியை சந்திக்கும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் வாழும் இந்தியர்களை அவமதித்த அமெரிக்காவைக் கண்டித்தும், அமெரிக்... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணிக் கட்சியினர் ஈகோவைக் கைவிட வேண்டும்: திருமாவளவன்

தில்லி தேர்தல் முடிவுகளைக் கருத்தில்கொண்டு இந்தியா கூட்டணிக் கட்சியினர் ஈகோவைக் கைவிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களுடன்... மேலும் பார்க்க