செய்திகள் :

"மொழியை வைத்து அரசியல் செய்யும் நிலை இப்போது இல்லை" - மத்திய அமைச்சர் எல்.முருகன்

post image
"தமிழகத்திற்கு கடந்த 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது..." என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கட்சி நிர்வாகிகள் வரவேற்பு

மதுரை வந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மீனாட்சியம்மன் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், "மத்திய அரசின் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. 2047 ஆண்டுக்கு அடித்தளமிட்டுள்ள வகையில் தொலை நோக்குப் பார்வையுடன் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதிகள் முறையாக ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய்க்கு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழக மக்கள் மீதும், தமிழ்நாட்டின் கலாசாரம், பண்பாட்டின் மீதும் பிரதமர் மிகுந்த பற்று வைத்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் அரசியலுக்காக தவறான தகவல்களைப் பேசி மக்களைத் தவறான திசையில் திருப்புகிறார்.

பி.எம் ஸ்ரீ திட்டத்திற்கு முதலில் கையெழுத்து போட்டார்கள். திரும்பப் பின் வாங்கிவிட்டார்கள் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் மிகத் தெளிவாகச் சொல்லி உள்ளார். நிதி விவகாரத்தில் தமிழகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பைத் தருவதாக தர்மேந்திர பிரதான் என்னிடம் சொன்னார்.

எல்.முருகன்

புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்னை?ஆரம்பக்கல்வியில் தாய் மொழியை ஊக்குவிப்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். கல்வியாளர்கள், வல்லுநர்கள் ஆகியோர்களின் ஆலோசனையின் படி உருவாக்கப்பட்டது தான் புதிய கல்விக் கொள்கை. இன்றைய காலகட்டத்தில் புதிய கல்விக் கொள்கை மிகவும் அவசியம். முன்பிருந்ததைப் போல இப்போது நாடு இல்லை. மக்கள் வளர்ச்சியை முன்னேற்றத்தை விரும்புகிறார்கள். மொழியை வைத்து அரசியல் செய்யும் நிலை இப்போது இல்லை.

நான் வெற்றிவேல் யாத்திரை  நடத்தினேன். நான் திருப்பரங்குன்றம் செல்வதில் எந்த அரசியலும் இல்லை. சர்ச்சையும் இல்லை. என் வழிபாட்டு உரிமை அடிப்படையில் செல்கிறேன். கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் தேசிய தலைமை முடிவெடுத்து அறிவிக்கும்" என்றார்.

`சமூக வலைதளம் முழுக்க இரயில் பரிதாபங்கள் வீடியோக்கள்... Sadist அரசு!' - ஸ்டாலின் சாடல்

கும்பமேளாவை ஒட்டி டெல்லியில் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் 18 பேர் மரணமடைந்த நிகழ்வு, நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரயில் நிலையத்தில் முன்பதிவில்லாமல் கூட்டம் கூட்டமாக... மேலும் பார்க்க

`மொழி' குறித்த ஜெக்தீப் தன்கரின் பேச்சு: `பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது' - கனிமொழி ட்வீட்

தமிழ்நாட்டின் பள்ளிகளில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் கல்விக்காக வழங்கப்பட்டுவந்த நிதியை நிறுத்தியுள்ளார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். இது ... மேலும் பார்க்க

USAID அமைப்போடு நீண்ட கால தொடர்பு; பொய் சொல்கிறதா பாஜக? - Fact Checkers சொல்வதென்ன?

அமெரிக்காவின் USAID அமைப்பு 21 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவின் தேர்தல் விழிப்புணர்வு பணிகளுக்கு ஒதுக்கியதன் மூலம், இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் தலையிடும் விதமாக செயல்பட்டதாக ட்ரம்ப் அ... மேலும் பார்க்க

NEP: `குறுகிய கண்ணோட்டம் வேண்டாம்; அரசியல் காரணங்களுக்காக..! - ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில், தமிழ்நாடு அரசு இதை ஏற்றுக்கொள்ளாவிடில் தமிழ்நாட்டுக்கு கல்விக்கான நிதி ஒதுக்க சட்டத்தில் இடமில்லை என்று, மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான கடந்த வாரம் கூறியது ம... மேலும் பார்க்க

கும்பமேளா: வாரணாசியில் நடந்தது என்ன? - சென்னை திரும்பிய மாற்றுத்திறனாளி வீரர்கள் விளக்கம்

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வாரணாசி சென்றிருந்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்கள், போட்டியை முடித்துவிட்டு கும்பமேளா நெரிசலால் ரயிலில் சென்னை திரும்ப முடியாமல் தவித்திருந்தனர்.இந்நிலையில் அவர்களை விம... மேலும் பார்க்க

`நீங்கள் இந்தியை பரப்ப வேண்டும் என்று பள்ளிக்கூடம் ஆரம்பித்தீர்களா?' - ஆவேசமான பொன்னார்

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கொடியேற்றுவிழா ஒன்றில் இன்று கலந்துகொண்டார். நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் சுனில் தலைமையில் முன்னாள் பிரதமர் வாய்பா... மேலும் பார்க்க