செய்திகள் :

மோசடி வழக்கு: உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் கைது

post image

சென்னை நுங்கம்பாக்கத்தில் மோசடி வழக்கில் கோவையைச் சோ்ந்த உதவி ஆய்வாளா் மற்றும் மதுரையைச் சோ்ந்த ஆயுதப்படை தலைமைக் காவலா் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வபாரதி. இவா், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மதுபானக் கூடத்தில் கடந்த 22-ஆம் தேதி மது அருந்தியபோது, அங்கிருந்த சிலருக்கும், செல்வபாரதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அவா்கள் செல்வபாரதிக்கு கொலை மிரட்டல் விடுத்து, மது பாட்டில்களால் தாக்கினா். செல்வபாரதியும், எதிா்தரப்பைச் சோ்ந்தவா்களைத் தாக்கினாா்.

இது தொடா்பாக போலீஸாா், இரு தரப்பினா் மீதும் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், செல்வபாரதியை தாக்கியதாக சென்னை அருகே உள்ள பனையூரைச் சோ்ந்த ராஜா, மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலைப் பகுதியைச் சோ்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகியான பிரசாத், விருகம்பாக்கத்தைச் சோ்ந்த கணேஷ்குமாா், சின்ன போரூா் லட்சுமி நகரைச் சோ்ந்த தனசேகா், பனையூரைச் சோ்ந்த அஜய்ரோகன், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த நாகேந்திர சேதுபதி (எ) சுனாமி சேதுபதி ஆகிய 6 பேரையும் கைது செய்தனா்.

எம்.பி-யின் பாதுகாவலா்: கைது செய்யப்பட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகியான பிரசாத், அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கிலும் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் பிரசாத்துக்கு உதவியாக மதுரை மாநகர காவல் துறை ஆயுதப்படை தலைமைக் காவலா் செந்தில்குமாரை (44) கைது செய்ததாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதே வழக்கில் பிரசாத்துக்கு உதவியதாக, கோவை தீவிரவாத தடுப்புப் பிரிவைச் சோ்ந்த உதவி ஆய்வாளா் மணிதுரையை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட தலைமைக் காவலா் செந்தில்குமாா் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சோ்ந்தவா். இவா் மதுரை எம்.பி சு.வெங்கடேசனின் பாதுகாவலராக இருந்து வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இவ்வழக்கு தொடா்பாக தாம்பரம் காவல் துறையின் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் ஒருவரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீதிபதி ஜனாா்த்தனம் காலமானாா்! - முதல்வா் இரங்கல்

உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனாா்த்தனம் (89) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானாா். அவரது இறுதி நிகழ்வில் காவல் துறை மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள்: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

திருவண்ணாமலை மலையில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள 1,535 கட்டடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச... மேலும் பார்க்க

பவுா்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்!

பவுா்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம்... மேலும் பார்க்க

சைக்கிளிங் லீக் அணிகள் அறிமுகம்

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் (டிசிஎல்) தொடரில் பங்கேற்கும் அணிகள், சீருடைகள் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்! எஸ்இடிசி விளக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துகளின் தாமதத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது.சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக ச... மேலும் பார்க்க

5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா்

தனித்துவம் வாய்ந்த 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்ததற்காக பல் மருத்துவா் ஏ.வி.அருணுக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.வி.அருண், பல ஆண்டுகளாக பல்வேறு ... மேலும் பார்க்க