செய்திகள் :

மோடியின் 11 ஆண்டு ஆட்சியில் சிதைவு, பிரிவினை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

post image

பிரதமர் மோடியின் முழு அரசியலும் தோல்வி, சிதைவு மற்றும் பிரிவினையால் நிறைந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கடந்த 11 ஆண்டுகளில், பாஜக தலைவர்கள் நிறைய பேசினார்கள், ஆவேசமான உறைகளை எழுப்பினார்கள். ஆனால் அவர்களின் ஒவ்வொரு திட்டமும் முற்றிலும் தோல்வியடைந்து புகைந்து போய்விட்டது. மோடியின் முழு அரசியலும் தோல்வியை சந்தித்துள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களும் பாதுகாப்பின்மையை உணர்ந்து வருவதாகவும், பிரதமர் மோடியின் உரைகள் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாக உள்ளது. 11 ஆண்டுகளின் வரலாற்றைப் பாருங்கள், ஆளும் பாஜக சிதைவு மற்றும் பிரிவினை அரசியலைச் செய்துள்ளது,

மத்திய அரசு பழங்குடியினர் மற்றும் தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்களைச் செய்ததாக குற்றம் சாட்டினார். பெண்கள், பழங்குடியினர் மற்றும் ராணுவ அதிகாரிகளை அவமதிக்கும் தனது கட்சியினர் மீது பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மக்களை அவமதிப்பதில் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் என்று அவர் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியின் 11 ஆண்டுக்கால ஆட்சி குறித்து கடுமையாக சாடினார். இவ்வளவு பொய்களைச் சொல்லும் பிரதமரை நான் பார்த்ததேயில்லை. இளைஞர்களை ஏமாற்றி, ஏழைகளை கவர்ந்திழுத்து வாக்குகளைப் பெறுகிறார் பிரதமர் என்று கலபுர்கியில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

லண்டன் பயணத்தை மாற்றி விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி!

லூதியானா இடைத்தேர்தல் காரணமாக விஜய் ரூபானி தனது லண்டன் பயணத்தை கடைசி நேரத்தில் மாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. அகமதாபாத்தில் நேற்று நடந்த ஏர் இந்தியா விமானத்தில் பலியானவர்களில் குஜராத் முன்னாள் முதல்... மேலும் பார்க்க

பஞ்சாபில் விமானப் படை ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்!

பஞ்சாபின் பதான்கோட் மாவட்டத்தில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான அபாச்சி ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. பதான்கோட் விமானப்படை தளத்திலிருந்து இன்று (ஜூன் 13) புறப்பட்ட அபாச்சி ரக ஹெலிகா... மேலும் பார்க்க

கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை! நாளை ரெட் அலர்ட்!

கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வடக்கு கர்நாடக கடல்பகுதியில் நிலவும் சுழற்சியினால், வரும் ஜூன் ... மேலும் பார்க்க

கோவாவில் தொடரும் கனமழை! 3 நாள்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கோவா மாநிலத்தில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், கடலோர மாநிலமான கோவாவின் பல்வேறு இ... மேலும் பார்க்க

கடந்தகால விமான விபத்துகளில் தப்பி வந்த அதிசயப் பிறவிகள்!

பொதுவாக விமான விபத்துகள் நேரிடும்போது, பலி எண்ணிக்கைக் கடுமையாக இருக்கக் காரணம், உயிர்பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதே.உயரத்திலிருந்து விழுவது, எரிபொருளால் வெடித்துக் சிதறுவது, விபத்து என்றாலே பயங... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு உதவ முன்வந்த எல்ஐசி!

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கான எல்ஐசி காப்பீட்டுக் கோரிக்கைகளை சிக்கலின்றி எளிதாக முடித்துக் கொடுக்க எல்ஐசி முன்வந்துள்ளது.காப்பீடுகளுக்கான கோரிக்களை மிக எளிதாக, எவ்வித... மேலும் பார்க்க