செய்திகள் :

ம.பி.யில் கணவருடன் கர்பா நடனமாடும்போது பெண் மயங்கி விழுந்து பலி!

post image

மத்தியப் பிரதேசத்தில் கணவருடன் கர்பா நடனமாடும்போது பெண் மயங்கி விழுந்து பலியானார்.

மத்தியப் பிரதேச மாநிலம், கர்கோன் மாவட்டத்தின் பிகான் கிராமத்தில் உள்ள சந்த் சிங்கஜி கோயிலில் நடந்த 'கர்பா' நிகழ்ச்சியில் தனது கணவருடன் 19 வயது புதுமணப் பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு நடனமாடியிருக்கிறார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்திருக்கிறார். உடனே அந்த பெண் மருத்துவரிடம் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்தார். சமூக ஊடகங்களில் வைரலான இந்த சம்பவத்தின் விடியோவில், மேடையில் துர்கா சிலை முன் அந்தப் பெண் தனது கணவருடன் பாலிவுட் பாடலுக்கு நடனமாடுவதைக் காணலாம். பின்னர் சில நிமிடங்களில் அந்தப் பெண் தரையில் சரிவது தெரிகிறது.

நல்லாட்சிக்கான முன்மாதிரி பாஜக: பிரதமர் மோடி

இந்த ஆண்டு மே மாதம் கிருஷ்ணா பாலுடன் சோனம் திருமணம் செய்து கொண்டதாக உள்ளூர்வாசி ஒருவர் கூறினார்.

உடற்கூராய்வு செய்யாமலே திங்கள்கிழமை பெண்ணின் இறுதிச் சடங்குகளைச் அவரது குடும்பத்தினர் செய்தனர். திங்கள்கிழமை சமூக ஊடகப் பதிவுகள் மூலம் மட்டுமே இந்த சம்பவம் குறித்து அறிந்ததாகவும், இறப்பு தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை என்றும் பிகாங்கான் காவல் நிலைய அதிகாரி குலாப் சிங் ராவத் தெரிவித்தார்.

A 19-year-old newlywed woman collapsed and died while dancing with her husband at a 'garba' event in Madhya Pradesh's Khargone district, police said on Monday.

இரவோடு இரவாக நடப்பதுதான் சந்தேகமாக இருக்கிறது: எம்.ஆர். விஜயபாஸ்கர்

கரூர் நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக நியாயமான விசாரணை வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார். அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், செய்தியாளர்களுடன் பேசுக... மேலும் பார்க்க

கரூர் பலி: தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது

கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பான வழக்கில் தவெகவின் அம்மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார்.கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெகவின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழ... மேலும் பார்க்க

பைக் மீது அரசுப்பேருந்து மோதல்: இரு இளைஞா்கள் பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.காஞ்சிபுரம் அருகே கீழ்ஒட்டிவாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சேட்டு என்ற பிரதீப்குமாா் (26... மேலும் பார்க்க

இரவில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

அழுவது போல் நடித்தவரா, அழுகையைப் பற்றிப் பேசுவது? இபிஎஸ்-க்கு அமைச்சர் அன்பில் மகேஸ் கேள்வி

அழுவது போல் நடித்தவரா, அழுகையைப் பற்றிப் பேசுவது? என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில... மேலும் பார்க்க

கரூர் பலி: வதந்தி பரப்பிய தவெக நிர்வாகி உள்பட மூவர் கைது

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக வதந்தியை பரப்பியதாக மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தியைப் பரப்பியதாக பாஜக மாநில நிர்வாகி ச... மேலும் பார்க்க