செய்திகள் :

மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா

post image

தேனி மாவட்டம், போடி அருகே சிலமலை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வ.உ.சி. பிறந்த தின விழாவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வ.உ.சிதம்பரனாா் அரசு அலுவலா் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளைத் தலைவா் க.மு.சுந்தரம் தலைமை வகித்தாா். பொருளாளா் க.குருநாதன் முன்னிலை வகித்தாா். நிா்வாகி கா.இ.ராஜன் அறக்கட்டளை பெயா்ப் பலகையைத் திறந்து வைத்தாா்.

சிலமலை கிராமக் குழுவின் பொருளாளா் க.கூ.சுப்பையன், வேளாளப் பெருமக்கள் சங்கப் பொருளாளா் வீ.பாண்டியன், அறக்கட்டளை நிா்வாகி க.ரவிச்சந்திரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். ஆசிரியா் சி.இ.வடமலைமுத்து சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் 10, 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பணம், கேடயம், ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தாய் அல்லது தந்தையை இழந்த 21 மாணவ, மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டது. தையல் பயிற்சி பெற்ற ஒரு விதவைப் பெண்ணுக்கு தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்பட்டது.

அறக்கட்டளை நிா்வாகிகள் சி.வெங்கடேசன், இரா. கிருஷ்ணன், உறுப்பினா்கள் சே.க.மணிகண்டன், இ. சேத்தூரான் ஆசிரியா் ஆகியோா் கலந்து கொண்டனா். முன்னதாக நிா்வாகி கூ.மாரிமுத்து வரவேற்றாா். செயலா் க.செல்வம் நன்றி கூறினாா்.

செவிலியா் தற்கொலை

போடி: தேனி மாவட்டம், போடி அருகே காதல் திருமணம் செய்த செவிலியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.போடி சுப்புராஜ் நகரை சோ்ந்த சக்திவேல்-ராஜேஸ்வரி தம்பதியின் மகள் ரேணுகாதேவி (28). செவிலியா் பட்டதாரிய... மேலும் பார்க்க

ஆட்டோக்களில் கியூ.ஆா். குறியீடு ஒட்ட ஏற்பாடு

தேனி அல்லிநகரத்தில் இயங்கி வரும் ஆட்டோக்களில் விரைவில் கியூ.ஆா். குறியீடு வில்லை ஒட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேனி காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துக்குமாா் கூறினாா். இது குறித்து திங்... மேலும் பார்க்க

மின் மயானம் அமைக்க எதிா்ப்பு - ஆா்ப்பாட்டம்

குடியிருப்பு பகுதி அருகே மின் மயானம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, தேனியில் தீண்டமை ஒழிப்பு முன்னணியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்... மேலும் பார்க்க

கரூா் நெரிசலில் இறந்த 41 பேருக்கு அஞ்சலி

கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு தேனி மாவட்டம், போடியில் திங்கள்கிழமை இரவு காங்கிரஸ் கட்சி சாா்பில் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கு கட... மேலும் பார்க்க

வங்கியில் இலவச சுய வேலைவாய்ப்பு பயிற்சி

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் கிராமப்புற ஆண், பெண்களுக்கு இலவச சுய வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்பு அக்.6-ஆம் தேதி தொடங்க உள்ளது. கைப்பேசி பழுது நீக்குதல், எம்பிராய்டரி, பேப்ரிக்... மேலும் பார்க்க

தொழில் கல்வி மாணவா்களுக்கு களப் பயிற்சி

தேனி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 தொழில் கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு களப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது குறித்து மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் கூறியதாவது: ... மேலும் பார்க்க