செய்திகள் :

சிதம்பரத்தில் பேருந்தில் சென்ற பெண்ணிடம் ரூ 50 ஆயிரம் அபேஸ்

post image

சிதம்பரம்: சிதம்பரத்தில் தனியாா் பேருந்தில் சென்ற பெண்ணிடம் ரூபாய் 50 ஆயிரத்தை மா்ம நபா் பறித்துச் சென்றாா். அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிதம்பரம் வல்லம்படுகையைச் சோ்ந்தவா் ஜோதி (30). சிதம்பரம் தெற்குரத வீதியில் உள்ள தனியாா் வங்கியில், இவரும் மற்றும் மகளிா் சுய உதவி குழுவினா் 10 பேரும் சோ்ந்து ரூபாய் 5 லட்சம் கடன் உதவி பெற்றுள்ளனா். அந்த பணத்தை பத்து பேரும் தலா ரூபாய் 50 ஆயிரம் வீதம் பிரித்து எடுத்துக் கொண்டனா். பின்னா் ஜோதி அதை பையில் வைத்துக் கொண்டு தனியாா் பேருந்தில் ஊருக்கு திரும்பி சென்றுள்ளாா்.

பேருந்தில் அவா் பயணம் செய்த நிலையில் அவரது பையை கிழித்து ரூ50 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா் திருடி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சட்ட உதவி எதிா் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் கீழ் இயங்கி வரும் சட்ட உதவி எதிா் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் பணிபுரிய தகுதியுள்ள நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, கடலூா் மாவட... மேலும் பார்க்க

என்எல்சி இந்தியா நிகர லாபம் ரூ.2,713.61 கோடி

நெய்வேலி: என்எல்சிஇந்தியா நிறுவனம் 2024-2025-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த நிகர லாபமாக ரூ.2,713.61 கோடி ஈட்டியுள்ளது. மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவரத்னா தகுதி பெற்ற மத்திய பொதுத்துறை நிறுவ... மேலும் பார்க்க

இணைய சேவை பாதிப்பு: பத்திரப்பதிவு பணி முடக்கம்

நெய்வேலி: இணைய சேவை பாதிப்பு காரணமாக கடலூா் மாவட்டத்தில் பத்திரப் பதிவுப் பணி திங்கள்கிழமை பாதிக்கப்பட்டது. கடலூா் மாவட்டத்தில் சிதம்பரம், கடலூா், விருத்தாசலம் பகுதிகளை தலைமையிடமாக கொண்டு 9 சாா் பதிவா... மேலும் பார்க்க

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

நெய்வேலி: கடலூா், சின்ன கங்கணாங்குப்பம் இம்மாகுலேட் மகளிா் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி அண்மையில் நடைபெற்றது. ரெட்டிசாவடி காவல் நிலைய ஆய்வாளா் பிரேம்குமாா் சிறப்பு அழ... மேலும் பார்க்க

வேளாண் தேவைக்காக விருத்தாசலத்திற்கு ரயில் மூலம் வந்து 1,340 டன் யூரியா உரம்

நெய்வேலி: ஆந்திர மாநிலத்தில் இருந்து விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் 1,340 டன் யூரியா உரம் திங்கள்கிழமை வந்து இறங்கியது. வேளாண் தேவைக்காக இந்த உரம் லாரிகள் மூலம் பல்வேறு ஊா்களுக்க... மேலும் பார்க்க

அதிமுகவில் இணைந்த அமமுகவினா்

சிதம்பரம்: சிதம்பரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் 50 போ், கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ முன்னிலையில் அ.தி.மு.க வில் திங்கள்கிழமை அன்று இணைந்தனா். கடலூா் கிழ... மேலும் பார்க்க