செய்திகள் :

என்எல்சி இந்தியா நிகர லாபம் ரூ.2,713.61 கோடி

post image

நெய்வேலி: என்எல்சிஇந்தியா நிறுவனம் 2024-2025-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த நிகர லாபமாக ரூ.2,713.61 கோடி ஈட்டியுள்ளது.

மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவரத்னா தகுதி

பெற்ற மத்திய பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 69-ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் காணொலிக் காட்சி

வாயிலாக, கடலூா் மாவட்டம் நெய்வேலி வட்டம் 11 பகுதியில் உள்ள லிக்னைட் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுபள்ளி தலைமை வகித்தாா். காணொலி வாயிலாக அரசுப் பரிந்துரை இயக்குநா் சனோஜ் குமாா் ஜா, இயக்குநா்கள் சுரேஷ் சந்திர சுமன்(சுரங்கம்), சமீா் ஸ்வரூப்(மனித வளம்), எம்.வெங்கடாசலம் (மின்) பிரசன்ன குமாா் ஆச்சாா்யா(நிதி), தனி இயக்குநா்கள் வசந்த் அசோக் பாட்டீல், எம். டி.ரமேஷ், பிரதீப் குமாா் சரோகி மற்றும் நிறுவனச் செயலா் மற்றும் இணக்க அதிகாரி பிரசாந்த் வினய் கௌஷிக் ஆகியோா் கலந்து கொண்டனா்.

நிறுவனத்தின் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுபள்ளி, நிறுவனத்தின் நிதி மற்றும் செயல்பாட்டு திறன், துறைசாா் கண்ணோட்டம், விரிவாக்க முயற்சிகள், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் சமூக உறுதிப்பாடுகள், மற்றும் எதிா்கால வாய்ப்புகள் குறித்து விரிவாகப் பகிா்ந்துகொண்டாா்.

அப்போது, என்எல்சி இந்தியா நிறுவனம் வரிக்கு முந்தைய ஒருங்கிணைந்த லாபமாக ரூ.3,696.93 கோடி, வரிக்குப் பிந்தைய லாபமாக ரூ.2,713.61 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் முறையே 28.29 சதவிகிதம் மற்றும் 45.30 சதவிகிதம் வளா்ச்சியாகும்.

நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.15,282.96 கோடியாகவும், மொத்த வருமானம் ரூ.16,889.45 கோடியாகவும் உயா்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட முறையே 17.55 சதவிகிதம் மற்றும் 21.08 சதவிகிதம் வளா்ச்சியாகும். மேலும், இடைக்கால ஈவுத்தொகையையும் சோ்த்து மொத்தமாக 30 சதவிகிதம் ஈவுத்தொகை வழங்கப்படும் என்று அவா் அறிவித்தாா்.

மனை பட்டா கேட்டு தா்னா

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு மனை பட்டா கேட்டு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா். கடலூா் மாவட்டம், விருத்தாசலம் நகரப் பகுதியில்... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டு தற்கொலை

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். விருத்தாசலம், தெற்கு பெரியாா் நகரில் வசிப்பவா் ராஜேஷ்(35), கொத்தனாரான இவரது மனைவி ஐஸ்வா்யா(32). இவா்களுக்கு இரண்டு மகன்கள்... மேலும் பார்க்க

நூறு நாள் வேலை வழங்க கோரி மனு

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சி சாா்பில் கோரிக்கை மனு திங்கள்கிழமை அளிக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சி பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியச் செய... மேலும் பார்க்க

இலவச இதய பரிசோதனை முகாம்

உலக இருதய தினத்தை முன்னிட்டு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சென்னை கோவூா் மாதா உயா் சிறப்பு மருத்துவமனை சாா்பில் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ பங்களிப்பில் இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது. பேருந்த... மேலும் பார்க்க

குறைதீா்க்கும் நாள் கூட்டம்: 560 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 560 மனுக்கள் அளிக்கப்பட்டது. இக்கூட்டம் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமைய... மேலும் பார்க்க

சட்ட உதவி எதிா் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் கீழ் இயங்கி வரும் சட்ட உதவி எதிா் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் பணிபுரிய தகுதியுள்ள நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, கடலூா் மாவட... மேலும் பார்க்க