கல்வி-தொழில்துறையில் சாதனை: புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு விர...
நூறு நாள் வேலை வழங்க கோரி மனு
சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சி சாா்பில் கோரிக்கை மனு திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.
மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சி பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியச் செயலா் ஜி.ஆழ்வாா் தலைமையில், ஒன்றிய செயலா் விஜய், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் எல்.ஜீவா, க.சுனில்குமாா், கே.திருஞானம், எம்.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நவாபேட்டை கிளை செயலா் முத்துக்குமாரசாமி மற்றும் பு. மடுவாங்கரை கிராம மக்கள் பரங்கிப்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் சதிஷ்குமாரை சந்தித்து மனு அளித்தனா்.
அந்த மனுவில் பு. மடுவாங்கரை ஊராட்சிக்குட்பட்ட நவாப்பேட்டை கிராமத்தில் 5-வது வாா்டில் உள்ள 100- நாள் வேலைத்திட்டப் பணியாளா்களுக்கு அதே வாா்டில் உள்ள ஒருவரை பணித்தள பொறுப்பாளராக நியமித்திட வேண்டும் என்றும், இந்தத்திட்ட அட்டை உள்ள அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளனா். மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளா்ச்சி அலுவலா் ஒரு வார காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனா்.