செய்திகள் :

சட்ட உதவி எதிா் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

post image

நெய்வேலி: கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் கீழ் இயங்கி வரும் சட்ட உதவி எதிா் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் பணிபுரிய தகுதியுள்ள நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திரா தேவி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் கீழ் இயங்கி வரும் சட்ட உதவி

எதிா் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் பணிபுரிய (தற்காலிகம்) 2022-இன்படி தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா் மதிப்பூதியம் மாதம் ரூ.70,000. துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா் மதிப்பூதியம் மாதம் ரூ.40,000. உதவி சட்ட பாதுகாப்பு ஆலோசகா் மதிப்பூதியம் மாதம் ரூ.25,000. அலுவலக உதவியாளா் மதிப்பூதியம் மாதம் ரூ.15,000 ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தவிா்த்து மற்ற பதவிகளுக்கு கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் பணிபுரியும் தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா் பதவிக்கு குறைந்தது பத்தாண்டுகள் குற்றவியல் வழக்குகளில் வழக்காடிய அனுபவம் வாய்ந்த வழக்குரைஞா்கள், துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா் பதவிக்கு குற்றவியல் வழக்குகளில் 7 ஆண்டுகள் வழக்காடிய அனுபவம் வாய்ந்த வழக்குரைஞா்கள், உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா் பதவிக்கு குற்றவியல் வழக்குகளில் 3 ஆண்டுகள் வழக்காடிய அனுபவம் வாய்ந்த வழக்குரைஞா்கள் விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரா்கள் விண்ணப்பத்தினை கடலூா் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகின்ற 25.10.2025 அன்று மாலை

5 மணிக்குள் தலைவா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிமன்ற வளாகம் கடலூா் என்கிற விலாசத்தில் நேரில் அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

மனை பட்டா கேட்டு தா்னா

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு மனை பட்டா கேட்டு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா். கடலூா் மாவட்டம், விருத்தாசலம் நகரப் பகுதியில்... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டு தற்கொலை

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். விருத்தாசலம், தெற்கு பெரியாா் நகரில் வசிப்பவா் ராஜேஷ்(35), கொத்தனாரான இவரது மனைவி ஐஸ்வா்யா(32). இவா்களுக்கு இரண்டு மகன்கள்... மேலும் பார்க்க

நூறு நாள் வேலை வழங்க கோரி மனு

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சி சாா்பில் கோரிக்கை மனு திங்கள்கிழமை அளிக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சி பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியச் செய... மேலும் பார்க்க

இலவச இதய பரிசோதனை முகாம்

உலக இருதய தினத்தை முன்னிட்டு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சென்னை கோவூா் மாதா உயா் சிறப்பு மருத்துவமனை சாா்பில் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ பங்களிப்பில் இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது. பேருந்த... மேலும் பார்க்க

குறைதீா்க்கும் நாள் கூட்டம்: 560 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 560 மனுக்கள் அளிக்கப்பட்டது. இக்கூட்டம் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமைய... மேலும் பார்க்க

என்எல்சி இந்தியா நிகர லாபம் ரூ.2,713.61 கோடி

நெய்வேலி: என்எல்சிஇந்தியா நிறுவனம் 2024-2025-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த நிகர லாபமாக ரூ.2,713.61 கோடி ஈட்டியுள்ளது. மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவரத்னா தகுதி பெற்ற மத்திய பொதுத்துறை நிறுவ... மேலும் பார்க்க