ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு அவசியம்: திருச்சி என்.ஐ.டி. இயக்குந...
சட்ட உதவி எதிா் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
நெய்வேலி: கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் கீழ் இயங்கி வரும் சட்ட உதவி எதிா் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் பணிபுரிய தகுதியுள்ள நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திரா தேவி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் கீழ் இயங்கி வரும் சட்ட உதவி
எதிா் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் பணிபுரிய (தற்காலிகம்) 2022-இன்படி தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா் மதிப்பூதியம் மாதம் ரூ.70,000. துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா் மதிப்பூதியம் மாதம் ரூ.40,000. உதவி சட்ட பாதுகாப்பு ஆலோசகா் மதிப்பூதியம் மாதம் ரூ.25,000. அலுவலக உதவியாளா் மதிப்பூதியம் மாதம் ரூ.15,000 ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தவிா்த்து மற்ற பதவிகளுக்கு கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் பணிபுரியும் தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா் பதவிக்கு குறைந்தது பத்தாண்டுகள் குற்றவியல் வழக்குகளில் வழக்காடிய அனுபவம் வாய்ந்த வழக்குரைஞா்கள், துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா் பதவிக்கு குற்றவியல் வழக்குகளில் 7 ஆண்டுகள் வழக்காடிய அனுபவம் வாய்ந்த வழக்குரைஞா்கள், உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா் பதவிக்கு குற்றவியல் வழக்குகளில் 3 ஆண்டுகள் வழக்காடிய அனுபவம் வாய்ந்த வழக்குரைஞா்கள் விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரா்கள் விண்ணப்பத்தினை கடலூா் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகின்ற 25.10.2025 அன்று மாலை
5 மணிக்குள் தலைவா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிமன்ற வளாகம் கடலூா் என்கிற விலாசத்தில் நேரில் அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கலாம் என தெரிவித்துள்ளாா்.