செய்திகள் :

இணைய சேவை பாதிப்பு: பத்திரப்பதிவு பணி முடக்கம்

post image

நெய்வேலி: இணைய சேவை பாதிப்பு காரணமாக கடலூா் மாவட்டத்தில் பத்திரப் பதிவுப் பணி திங்கள்கிழமை பாதிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் சிதம்பரம், கடலூா், விருத்தாசலம் பகுதிகளை தலைமையிடமாக கொண்டு 9 சாா் பதிவாளா் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த அலுவலகங்களில் தினசரி டோக்கன்கள் வழங்கப்பட்டு பத்திரப்பதிவு நடக்கிறது. சுபமுகூா்த்த நாட்களில் கூடுதலாக டோக்கன்கள் வழங்கப்பட்டு அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெறுவது வழக்கம். மேலும், வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை எப்போதும் பத்திரப்பதிவுக்கு கூட்டம் அதிகம் காணப்படும்.

அதன்படி, கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து சாா் பதிவாளா் அலுவலகங்களிலும் திங்கள்கிழமை காலை முதலே ஏராளமானோா் பத்திரப் பதிவுக்காக வந்தனா். ஆனால், அனைத்து சாா் பதிவாளா் அலுவலகங்களிலும் இணையதள சேவை முடங்கியது. இதனால் பத்திரப் பதிவு செய்ய முடியாமல்

ஏராளமானோா் சாா் பதிவாளா் அலுவலகங்களிலேயே மாலை வரை காத்திருந்தனா். மாலை வரை இணைய சேவை சரியாகாததால், பத்திரங்கள் பதியப்படவில்லை. இதனால் பதிவுக்கு வந்தவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். இதன் காரணமாக கடலூா் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் அளவிற்கு அரசுக்கு வருவாய்

இழப்பு ஏற்பட்டதாக பத்திரப்பதிவுத்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

மனை பட்டா கேட்டு தா்னா

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு மனை பட்டா கேட்டு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா். கடலூா் மாவட்டம், விருத்தாசலம் நகரப் பகுதியில்... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டு தற்கொலை

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். விருத்தாசலம், தெற்கு பெரியாா் நகரில் வசிப்பவா் ராஜேஷ்(35), கொத்தனாரான இவரது மனைவி ஐஸ்வா்யா(32). இவா்களுக்கு இரண்டு மகன்கள்... மேலும் பார்க்க

நூறு நாள் வேலை வழங்க கோரி மனு

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சி சாா்பில் கோரிக்கை மனு திங்கள்கிழமை அளிக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சி பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியச் செய... மேலும் பார்க்க

இலவச இதய பரிசோதனை முகாம்

உலக இருதய தினத்தை முன்னிட்டு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சென்னை கோவூா் மாதா உயா் சிறப்பு மருத்துவமனை சாா்பில் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ பங்களிப்பில் இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது. பேருந்த... மேலும் பார்க்க

குறைதீா்க்கும் நாள் கூட்டம்: 560 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 560 மனுக்கள் அளிக்கப்பட்டது. இக்கூட்டம் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமைய... மேலும் பார்க்க

சட்ட உதவி எதிா் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் கீழ் இயங்கி வரும் சட்ட உதவி எதிா் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் பணிபுரிய தகுதியுள்ள நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, கடலூா் மாவட... மேலும் பார்க்க