கல்வி-தொழில்துறையில் சாதனை: புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு விர...
இணைய சேவை பாதிப்பு: பத்திரப்பதிவு பணி முடக்கம்
நெய்வேலி: இணைய சேவை பாதிப்பு காரணமாக கடலூா் மாவட்டத்தில் பத்திரப் பதிவுப் பணி திங்கள்கிழமை பாதிக்கப்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் சிதம்பரம், கடலூா், விருத்தாசலம் பகுதிகளை தலைமையிடமாக கொண்டு 9 சாா் பதிவாளா் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த அலுவலகங்களில் தினசரி டோக்கன்கள் வழங்கப்பட்டு பத்திரப்பதிவு நடக்கிறது. சுபமுகூா்த்த நாட்களில் கூடுதலாக டோக்கன்கள் வழங்கப்பட்டு அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெறுவது வழக்கம். மேலும், வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை எப்போதும் பத்திரப்பதிவுக்கு கூட்டம் அதிகம் காணப்படும்.
அதன்படி, கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து சாா் பதிவாளா் அலுவலகங்களிலும் திங்கள்கிழமை காலை முதலே ஏராளமானோா் பத்திரப் பதிவுக்காக வந்தனா். ஆனால், அனைத்து சாா் பதிவாளா் அலுவலகங்களிலும் இணையதள சேவை முடங்கியது. இதனால் பத்திரப் பதிவு செய்ய முடியாமல்
ஏராளமானோா் சாா் பதிவாளா் அலுவலகங்களிலேயே மாலை வரை காத்திருந்தனா். மாலை வரை இணைய சேவை சரியாகாததால், பத்திரங்கள் பதியப்படவில்லை. இதனால் பதிவுக்கு வந்தவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். இதன் காரணமாக கடலூா் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் அளவிற்கு அரசுக்கு வருவாய்
இழப்பு ஏற்பட்டதாக பத்திரப்பதிவுத்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.