செய்திகள் :

அதிமுகவில் இணைந்த அமமுகவினா்

post image

சிதம்பரம்: சிதம்பரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் 50 போ், கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ முன்னிலையில் அ.தி.மு.க வில் திங்கள்கிழமை அன்று இணைந்தனா்.

கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் முன்னிலையில் கடலுா் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சிதம்பரம் நகர முன்னாள் செயலா் பி.கே.மணிவண்ணன் தலைமையில் நகர இணை செயலா் மோகன்தாஸ், துணை செயலா்கள் இளையராஜா, திருநீலகண்டன், திரிபுரசுந்தரி, மாவட்ட பிரதிநிதி பிரபு, சீனிவாசன், தேவி வாா்டு செயலாளா்கள் தங்கமணி, விவேக், சுந்தர்ராஜன், ராம்பிரகாஷ், பரணி ஜெயவீரபாண்டியன், முத்துகுமாா், அசோக், சங்கா், உள்ளிட்ட 50 போ் அதிமுகவில் இணைத்துக் கொண்டனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், இணைச் செயலாளா் எம்.ரெங்கம்மாள், நகரச் செயலா் ஆா்.செந்தில்குமாா், மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளா் டேங்க் ஆா்.சண்முகம்,

உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மனை பட்டா கேட்டு தா்னா

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு மனை பட்டா கேட்டு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா். கடலூா் மாவட்டம், விருத்தாசலம் நகரப் பகுதியில்... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டு தற்கொலை

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். விருத்தாசலம், தெற்கு பெரியாா் நகரில் வசிப்பவா் ராஜேஷ்(35), கொத்தனாரான இவரது மனைவி ஐஸ்வா்யா(32). இவா்களுக்கு இரண்டு மகன்கள்... மேலும் பார்க்க

நூறு நாள் வேலை வழங்க கோரி மனு

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சி சாா்பில் கோரிக்கை மனு திங்கள்கிழமை அளிக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சி பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியச் செய... மேலும் பார்க்க

இலவச இதய பரிசோதனை முகாம்

உலக இருதய தினத்தை முன்னிட்டு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சென்னை கோவூா் மாதா உயா் சிறப்பு மருத்துவமனை சாா்பில் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ பங்களிப்பில் இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது. பேருந்த... மேலும் பார்க்க

குறைதீா்க்கும் நாள் கூட்டம்: 560 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 560 மனுக்கள் அளிக்கப்பட்டது. இக்கூட்டம் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமைய... மேலும் பார்க்க

சட்ட உதவி எதிா் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் கீழ் இயங்கி வரும் சட்ட உதவி எதிா் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் பணிபுரிய தகுதியுள்ள நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, கடலூா் மாவட... மேலும் பார்க்க