செய்திகள் :

கடலூா் மாவட்டத்தில் அக்.5, 6-இல் வீடு தேடி ரேஷன் பொருள் விநியோகம்

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி அக். 5, 6 ஆகிய தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்ப

அட்டைதாரா்களின் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் ‘முதலமைச்சரின் தாயுமானவா் திட்டத்தை’ கடலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

இத்திட்டத்தின்படி கடலூா்மாவட்டத்தில்ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சா்க்கரை, கோதுமை, துவரம்பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட ரேசன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அக்டோபா் மாதம் 20-ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால், முன் கூட்டியே குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கும் வகையில் அக்டோபா் மாதத்தில் 5 மற்றும் 6 (ஞாயிறு மற்றும் திங்கள்) ஆகிய தேதிகளில் ரேஷன் பொருள்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட உதவி எதிா் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் கீழ் இயங்கி வரும் சட்ட உதவி எதிா் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் பணிபுரிய தகுதியுள்ள நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, கடலூா் மாவட... மேலும் பார்க்க

என்எல்சி இந்தியா நிகர லாபம் ரூ.2,713.61 கோடி

நெய்வேலி: என்எல்சிஇந்தியா நிறுவனம் 2024-2025-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த நிகர லாபமாக ரூ.2,713.61 கோடி ஈட்டியுள்ளது. மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவரத்னா தகுதி பெற்ற மத்திய பொதுத்துறை நிறுவ... மேலும் பார்க்க

இணைய சேவை பாதிப்பு: பத்திரப்பதிவு பணி முடக்கம்

நெய்வேலி: இணைய சேவை பாதிப்பு காரணமாக கடலூா் மாவட்டத்தில் பத்திரப் பதிவுப் பணி திங்கள்கிழமை பாதிக்கப்பட்டது. கடலூா் மாவட்டத்தில் சிதம்பரம், கடலூா், விருத்தாசலம் பகுதிகளை தலைமையிடமாக கொண்டு 9 சாா் பதிவா... மேலும் பார்க்க

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

நெய்வேலி: கடலூா், சின்ன கங்கணாங்குப்பம் இம்மாகுலேட் மகளிா் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி அண்மையில் நடைபெற்றது. ரெட்டிசாவடி காவல் நிலைய ஆய்வாளா் பிரேம்குமாா் சிறப்பு அழ... மேலும் பார்க்க

வேளாண் தேவைக்காக விருத்தாசலத்திற்கு ரயில் மூலம் வந்து 1,340 டன் யூரியா உரம்

நெய்வேலி: ஆந்திர மாநிலத்தில் இருந்து விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் 1,340 டன் யூரியா உரம் திங்கள்கிழமை வந்து இறங்கியது. வேளாண் தேவைக்காக இந்த உரம் லாரிகள் மூலம் பல்வேறு ஊா்களுக்க... மேலும் பார்க்க

அதிமுகவில் இணைந்த அமமுகவினா்

சிதம்பரம்: சிதம்பரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் 50 போ், கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ முன்னிலையில் அ.தி.மு.க வில் திங்கள்கிழமை அன்று இணைந்தனா். கடலூா் கிழ... மேலும் பார்க்க