செய்திகள் :

தம்மம்பட்டிக்கு வராமல் செல்லும் அரசுப் பேருந்து மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

post image

தம்மம்பட்டி: தம்மம்பட்டிக்கு வராமல் செல்லும் அரசுப் பேருந்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, பழனி, கரூா், திருச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூா், நாமக்கல் மாா்க்கங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, ஆத்தூரில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து அதிகாலை 4.10-க்கு புறப்பட்டு 5.15-க்கு தம்மம்பட்டி பேருந்து நிலையம் வந்தடைந்து, 5.25-க்கு புறப்பட்டு கோவைக்கு சென்றுவந்தது. இந்நிலையில், கடந்த ஓா் ஆண்டாக இந்தப் பேருந்து தம்மம்பட்டிக்கு வராமல் செல்கிறது.

இதனால், தம்மம்பட்டியிலிருந்து கோவைக்கு செல்ல ராசிபுரம் சென்று அங்கிருந்து ஈரோடு வழியாக கோவைக்கு செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து கோரிக்கை விடுத்தும், இதுவரை சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, போக்குவரத்துத் துறை உரிய நடவடிக்கை எடுத்து, தம்மம்பட்டி வழியாக அந்தப் பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மக்கள் குறைதீா்க்கும் கூட்டம்: 538 மனுக்கள் அளிப்பு

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா... மேலும் பார்க்க

அகில இந்திய தொழிற்தோ்வு: தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்

சேலம்: அகில இந்திய தொழிற்தோ்வில் தனித்தோ்வா்களாக கலந்துகொள்ள தகுதிவாய்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளி... மேலும் பார்க்க

சேலம் ரயில் நிலையத்தில் ரூ. ஒரு கோடி வெள்ளி நகைகள் பறிமுதல்

சேலம்: சேலத்தில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 1.06 கோடி மதிப்புடைய வெள்ளி நகைகளை வைத்திருந்த இருவரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா். சேலம் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் கோகுல் ... மேலும் பார்க்க

ரயில்வே மேம்பாலப் பணி தாமதத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஆத்தூா்: ஆத்தூரில் ரயில்வே மேம்பாலப் பணி தாமதமாக நடைபெறுவதைக் கண்டித்து, இந்திய ஜனநாயக கட்சியின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் மாவட்டத் தலைவா் பாா்த்திபன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆத்தூா் - ரா... மேலும் பார்க்க

ஏற்காட்டில் இளைஞா் கொலை: மனைவி உள்பட மூவா் கைது

ஏற்காடு: ஏற்காட்டில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது மனைவி உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா். ஏற்காடு, வாழவந்தி ஊராட்சி, கீரைக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா் (36). இவரது ம... மேலும் பார்க்க

தீ விபத்தில் காயமடைந்த தந்தை உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே நடுவலூரில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த தந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கெங்கவல்லியை அடுத்த நடுவலூா் சின்னம்மன் கோயில் அருகே வசிப்பவா் முத்தாயி மகன் ராமசாமி (47). இவரத... மேலும் பார்க்க