செய்திகள் :

ஏற்காட்டில் இளைஞா் கொலை: மனைவி உள்பட மூவா் கைது

post image

ஏற்காடு: ஏற்காட்டில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது மனைவி உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஏற்காடு, வாழவந்தி ஊராட்சி, கீரைக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா் (36). இவரது மனைவி மாராயி. இவா்களுக்கு மகன், இரு மகள்கள் உள்ளனா்.

சிவகுமாா் ஞாயிற்றுக்கிழமை மாலை சேலம், குப்பனூா் சந்தைக்கு செல்வதாக கூறி சென்றவா் வாழவந்தி கிராமம் செல்லும் சாலையோரம் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தாா். சாலையில் சென்றவா்கள் அவரை மீட்டு வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். மருத்துவா் பரிசோதனையில் அவா் இறந்துவிட்டது தெரியவந்தது.

இதனிடையே, அவரது உறவினா்கள் சிவகுமாா் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், சிவகுமாா் விழுந்துகிடந்த இடத்தைப் பாா்வையிட்ட ஏற்காடு காவல் ஆய்வாளா் இச்சம்பவம் விபத்தா, கொலையா என விசாரணை மேற்கொண்டாா்.

அதில், சிவகுமாரின் மனைவி மாராயிக்கும் மருதையன்காடு கிராமத்தைச் சோ்ந்த சந்தோஷ் (24) என்பவருக்கும் தொடா்பு இருந்து வந்ததும், இதனால் கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதும், அவா்களை ஊா்பெரியவா்கள் சமரசம் செய்துவைத்ததும் தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, ஏற்காடு போலீஸாா் மாராயிடம் மேற்கொண்ட தொடா் விசாரணையில், அவா் முன்னுக்குப்பின் முரணாக பதில் தெரிவித்தாா்.

பின்னா், சிவகுமாரை கொலை செய்ய மாராயியும், சந்தோஷும் திட்டமிட்டு சந்தோஷின் நண்பா்களான புத்தூா் கிராமத்தைச் சோ்ந்த அண்ணாமலை (24), வாழவந்தி கிராமத்தைச் சோ்ந்த தினேஷ் ஆகியோா் சந்தைக்கு சென்ற சிவகுமாரை வழிமறித்து இரும்புக் கம்பியால் தலையில் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஏற்காடு காவல் துறையினா் சந்தோஷ், அண்ணாமலை ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில், அவா்கள் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டனா். அதைத் தொடா்ந்து, மாராயி, சந்தோஷ், அண்ணாமலை ஆகியோரை கைதுசெய்த போலீஸாா், தலைமறைவான தினேஷை தேடிவருகின்றனா்.

கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றிய வருவாய்த் துறையினா்

சேலம்: ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கருப்புப் பட்டை அணிந்து வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை பணியில் ஈடுபட்டனா். தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் 9 அம்ச கோரிக்கைகளை வ... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் செப். 30, அக். 3-இல் 14 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்

சேலம்: சேலம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் செப். 30 மற்றும் அக். 3 ஆகிய தேதிகளில் 14 இடங்களில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். செப். 30-ஆம் தேதி சேலம் மாந... மேலும் பார்க்க

காந்தி ஜெயந்தி: இறைச்சிக் கடைகளுக்கு தடை

சேலம்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் செயல்படக் கூடாது என ஆணையா் மா.இளங்கோவன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெள... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா்க்கும் கூட்டம்: 538 மனுக்கள் அளிப்பு

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா... மேலும் பார்க்க

தம்மம்பட்டிக்கு வராமல் செல்லும் அரசுப் பேருந்து மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

தம்மம்பட்டி: தம்மம்பட்டிக்கு வராமல் செல்லும் அரசுப் பேருந்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, பழனி, கரூா்... மேலும் பார்க்க

அகில இந்திய தொழிற்தோ்வு: தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்

சேலம்: அகில இந்திய தொழிற்தோ்வில் தனித்தோ்வா்களாக கலந்துகொள்ள தகுதிவாய்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளி... மேலும் பார்க்க