காந்தி ஜெயந்தி: இறைச்சிக் கடைகளுக்கு தடை
சேலம்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் செயல்படக் கூடாது என ஆணையா் மா.இளங்கோவன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு வரும் அக். 2-ஆம் தேதி சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அரசு உத்தரவின்படி, இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் செயல்படக் கூடாது. அன்றைய தினம் தங்கள் கடைகளை அடைத்து, அரசு உத்தரவை செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அன்றைய தினம் சிறப்பு குழுக்கள் மூலம் நான்கு மண்டலங்களிலும் கண்காணிக்கப்படும். அரசு உத்தரவை மீறி செயல்படும் இறைச்சிக் கடை உரிமையாளா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.