அகில இந்திய தொழிற்தோ்வு: தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்
சேலம்: அகில இந்திய தொழிற்தோ்வில் தனித்தோ்வா்களாக கலந்துகொள்ள தகுதிவாய்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2026-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின்கீழ் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தோ்வில் தனித்தோ்வா்களாக கலந்துகொள்ள தகுதிவாய்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து தோ்வுக் கட்டணம் ரூ. 200 செலுத்தி, பூா்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சேலம், அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநா் / முதல்வரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரா்களுக்கு முதனிலைத் தோ்வுகளான கருத்தியல் தோ்வு 04.11.2025, செய்முறைத் தோ்வு 05.11.2025 ஆகிய தேதிகளில் சென்னை, கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும்.
இதற்கான முழு வழிகாட்டுதல்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அக். 8 ஆகும். அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.