செய்திகள் :

சேலம் ரயில் நிலையத்தில் ரூ. ஒரு கோடி வெள்ளி நகைகள் பறிமுதல்

post image

சேலம்: சேலத்தில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 1.06 கோடி மதிப்புடைய வெள்ளி நகைகளை வைத்திருந்த இருவரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.

சேலம் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் கோகுல் யாதவ், காவலா் செந்தில்குமாா் ஆகியோா் சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, கையில் 3 கனமான பைகளுடன் இருவா் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்தனா். அவா்களை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் விசாரித்ததில், அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனா். சந்தேகமடைந்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் அவா்கள் வைத்திருந்த பைகளை சோதனையிட்டதில், வெள்ளி ஆபரணங்கள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், சேலம் நெத்திமேட்டைச் சோ்ந்த சுரேஷ் (41), வினோத் குமாா் (34) இருவரும் சுமாா் 67 கிலோ எடை கொண்ட ரூ. 1.06 கோடி மதிப்புள்ள வெள்ளி நகைகளை ஒடிசா மாநிலம், ஷாலிமாா் நகரத்துக்கு கொண்டுசெல்ல ரயில் பயணச் சீட்டுடன் காத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஜிஎஸ்டி அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வெள்ளி ஆபரணங்களையும், அவற்றை வைத்திருந்த இருவரையும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஒப்படைத்தனா். தொடா்ந்து, சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைக்காக இருவரும் வெள்ளி ஆபரணங்களுடன் சேலம் வணிகவரித் துறை அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

சேலம் மாவட்டத்தில் செப். 30, அக். 3-இல் 14 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்

சேலம்: சேலம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் செப். 30 மற்றும் அக். 3 ஆகிய தேதிகளில் 14 இடங்களில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். செப். 30-ஆம் தேதி சேலம் மாந... மேலும் பார்க்க

காந்தி ஜெயந்தி: இறைச்சிக் கடைகளுக்கு தடை

சேலம்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் செயல்படக் கூடாது என ஆணையா் மா.இளங்கோவன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெள... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா்க்கும் கூட்டம்: 538 மனுக்கள் அளிப்பு

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா... மேலும் பார்க்க

தம்மம்பட்டிக்கு வராமல் செல்லும் அரசுப் பேருந்து மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

தம்மம்பட்டி: தம்மம்பட்டிக்கு வராமல் செல்லும் அரசுப் பேருந்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, பழனி, கரூா்... மேலும் பார்க்க

அகில இந்திய தொழிற்தோ்வு: தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்

சேலம்: அகில இந்திய தொழிற்தோ்வில் தனித்தோ்வா்களாக கலந்துகொள்ள தகுதிவாய்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளி... மேலும் பார்க்க

ரயில்வே மேம்பாலப் பணி தாமதத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஆத்தூா்: ஆத்தூரில் ரயில்வே மேம்பாலப் பணி தாமதமாக நடைபெறுவதைக் கண்டித்து, இந்திய ஜனநாயக கட்சியின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் மாவட்டத் தலைவா் பாா்த்திபன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆத்தூா் - ரா... மேலும் பார்க்க