செய்திகள் :

இரவோடு இரவாக நடப்பதுதான் சந்தேகமாக இருக்கிறது: எம்.ஆர். விஜயபாஸ்கர்

post image

கரூர் நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக நியாயமான விசாரணை வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், செய்தியாளர்களுடன் பேசுகையில் ``தவெக தலைவர் பிரசாரத்தின்போது, ஆம்புலன்ஸ் வருகிறது. அதில் ஆளில்லை; அது எங்கிருந்து வருகிறது என்றும் தெரியவில்லை.

நாமக்கல்லில் இருந்து ஒரு ஆம்புலன்ஸ் அவர்கள் கூட்டி வந்தது என்று அவர்கள் சொன்னார்கள். அதன் பின்னர் வந்த 2 ஆம்புலன்ஸ், எப்படி உள்ளே வந்தது? சம்பவத்துக்கு முன்னர் பேசிக்கொண்டிருக்கும்போது அந்த ஆம்புலன்ஸ் எப்படி வந்தது என்பதுதான் எங்கள் கேள்வி.

அவர் பேசத் தொடங்கியவுடன் லைட் அணைகிறது, போலீஸ் தடியடி நடத்துகின்றனர், செருப்பு வீசுகிறார்கள், ஆம்புலன்ஸ் வருகிறது - இவையெல்லாம் பார்த்தால் சந்தேகம் இருப்பதாக சமூக ஊடகங்களில் கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி, இரவோடு இரவாக உடற்கூறாய்வு செய்கின்றனர், 40 ஆம்புலன்ஸ்களை ஸ்டிக்கர் ஒட்டி தயாராக வைத்திருக்கின்றனர், இரவோடு இரவாக முதல்வர் வருகிறார், நிவாரணத் தொகை அறிவிப்பு, தனிநபர் ஆணையம் அறிவிப்பு - இவற்றையெல்லாம் பெருமையாகச் சொல்கின்றனர். இதற்குத்தான் அரசாங்கம் இருக்கிறது; முதல்வர் இருக்கிறார்.

இதே, கள்ளக்குறிச்சியில் 68 பேர் இறந்தபோது, முதல்வர் எங்கே போனார்? ஏன் அவர்களைப் பார்க்கவில்லை; ஆறுதல் சொல்லவில்லை. சென்னை மெரீனாவில் ஏர் ஷோ நெரிசலில் 5 பேர் இறந்தார்கள். அவர்களை ஏன் பார்க்கவில்லை? ஆறுதல் சொல்லவில்லை?

அப்படியென்றால், இரவோடு இரவாக நடப்பவற்றைப் பார்த்தால் சந்தேகம் வருகிறது என்று சமூக ஊடகங்களில் கூறுகின்றனர்.

ஒரு நபர் ஆணையம் விசாரிக்கச் சென்றபோது, பின்னால் இருந்துகொண்டு மிரட்டுகின்றனர். பேசக் கூடாது; வாயை மூடு என்று கையைக் காட்டுகின்றனர். இப்படியிருக்கையில் எப்படி நியாமமான விசாரணை நடக்கும்? அவர்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும் என்பதுதான் பொதுமக்களின் கோரிக்கை’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:கரூர் பலி: தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது

Former Minister M.R. Vijayabaskar doubts Karur Stampede Issue

கரூர் பலி: தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது

கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பான வழக்கில் தவெகவின் அம்மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார்.கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெகவின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழ... மேலும் பார்க்க

பைக் மீது அரசுப்பேருந்து மோதல்: இரு இளைஞா்கள் பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.காஞ்சிபுரம் அருகே கீழ்ஒட்டிவாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சேட்டு என்ற பிரதீப்குமாா் (26... மேலும் பார்க்க

இரவில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

ம.பி.யில் கணவருடன் கர்பா நடனமாடும்போது பெண் மயங்கி விழுந்து பலி!

மத்தியப் பிரதேசத்தில் கணவருடன் கர்பா நடனமாடும்போது பெண் மயங்கி விழுந்து பலியானார். மத்தியப் பிரதேச மாநிலம், கர்கோன் மாவட்டத்தின் பிகான் கிராமத்தில் உள்ள சந்த் சிங்கஜி கோயிலில் நடந்த 'கர்பா' நிகழ்ச்சிய... மேலும் பார்க்க

அழுவது போல் நடித்தவரா, அழுகையைப் பற்றிப் பேசுவது? இபிஎஸ்-க்கு அமைச்சர் அன்பில் மகேஸ் கேள்வி

அழுவது போல் நடித்தவரா, அழுகையைப் பற்றிப் பேசுவது? என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில... மேலும் பார்க்க

கரூர் பலி: வதந்தி பரப்பிய தவெக நிர்வாகி உள்பட மூவர் கைது

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக வதந்தியை பரப்பியதாக மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தியைப் பரப்பியதாக பாஜக மாநில நிர்வாகி ச... மேலும் பார்க்க