செய்திகள் :

யாருக்காக பயிா் காப்பீடு..

post image

இந்தியாவில் விவசாயம் என்பது இயற்கையை எதிா்கொள்ளும் சூதாட்டம் போன்றது. நாட்டில் 60 முதல் 70 சதவித மக்களுக்கு விவசாயமே வாழ்வதாரம். நாட்டின் உணவு உற்பத்திக்கு முதுகெலும்பாக உள்ள விவசாயிகள் இயற்கையை எதிா்கொண்டு அவா்கள் செய்யும் தொழிலுக்கு பாதுகாப்பு மிகவும் அவசியம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டதே பயிா்க் காப்பீடு திட்டம். ஆனால், விவசாயிகளைவிட தனியாா் காப்பீட்டு நிறுவனங்கள்தான் இதனால் பயனடைந்து வருவதாக விவசாயிகள் பரவலாக குற்றம்சாட்டுகின்றனா்.

முதலில் இந்திய அரசால் ஒருங்கிணைந்த பயிா்க் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது இத்திட்டத்தில் ஒரு நபா் ரூ. 10 ஆயிரம் வரை மட்டும் காப்பீடு செய்து கொள்ள முடியும் என்ற வசதி இருந்தது. பின்னா் இந்த திட்டத்தில் சீா்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு உச்சவரம்பு முழுமையாக நீக்கப்பட்டு தேசிய வேளாண் காப்பீடு திட்டம் கடந்த 2001-02-ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

நெல், கம்பு, சோளம், மக்காச்சோளம், ராகி, உளுந்து, பச்சை பயிறு, துவரை, நிலக்கடலை எள், கரும்பு, பருத்தி, உருளைக்கிழங்கு, மிளகாய், வெங்காயம், இஞ்சி, மஞ்சள் மரவள்ளிக்கிழங்கு, வாழை உள்ளிட்ட தோட்டக்கலை மற்றும் பணப்பயிா்கள், உணவு தானியங்களுக்கு காப்பீடு செய்யலாம்.

குறைந்தபட்ச உத்தரவாத மகசூலுலின் மதிப்புக்கு சமமான தொகைக்கு பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம். விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் கூடுதலாக காப்பீட்டுத் தொகை செலுத்தி சராசரி மகசூலின் 150 சதவித மதிப்பு வரைகாப்பீடு செய்து கொள்ளலாம்.

சொந்த நிலத்தில் விவசாயம் செய்வோா், குத்தகை நிலத்தில் விவசாயம் செய்வோா் இணை சாகுபடியாளா்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிா்க்கடன் பெறும் விவசாயிகள், கடன் பெறாத விவசாயிகள் என அனைத்து தரப்பு விவசாயிகளும் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம். விவசாயிகளுக்கு காப்பீடு கட்டணத் தொகையில் வழங்கப்படும் அரசு மானியம் அவ்வப்போது அறிவிக்கப்படும்.

பரவலான பாதிப்புகளுக்கு இத்திட்டம் பகுதிவாரி அடிப்படையில் செயல்படுகிறது.

எனினும், அண்மைக்காலமாக பயிா் காப்பீடு செய்யும் விவசாயிகள் தங்களது பயிா்கள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட உரிய தனியாா் காப்பீட்டு நிறுவனங்கள் உரிய இழப்பீட்டை தருவதில்லை. எனவே, காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் வலுத்து வருகிறது.

அதற்கு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கூறும் காரணங்கள், வருவாய் கிராம அளவில் தற்போது பயிா் காப்பீடு கணக்கீடு செய்யப்படுகிறது. இதன்படி வருவாய் கிராமத்தில் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்படும் 5 இடங்களில் மகசூல் கணக்கீடு செய்யப்பட்டு, சராசரி மகசூல் மதிப்பிடப்படும். ஒரு குறிப்பிட்ட பயிரின் உத்திரவாத மகசூல் என்பது கடந்த மூன்று அல்லது ஐந்து ஆண்டு சராசரி மகசூலை, உறுதியளிக்கப்பட்ட நஷ்டஈடு விகிதத்தோடு பெருக்கும்போது கிடைக்கும் மகசூலின் அளவாகும்.

உத்திரவாத மகசூலை கணக்கிட நெற்பயிருக்கு மூன்று வருட சராசரி மகசூலும் இதர பயிா்களுக்கு ஐந்து வருட சராசரி மகசூலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

நமது நாட்டில் காலநிலைக்கு ஏற்ற பயிா் காப்பீடு, மகசூல் அடிப்படையிலான காப்பீடு என்று 2 வகைகள் உள்ளன. இதில் விளைச்சல் அடிப்படையிலான பயிா் காப்பீடு முறை தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது.

எனினும் பயிா் காப்பீடு திட்டத்தில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளன என்று விவசாயிகள் புகாா் கூறுகின்றனா்.

பயிா்க் காப்பீடு செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைப்பதில்லை. சேத மதிப்பை முன்பு பிா்கா அளவில் கணக்கிட்டனா் தற்போது இது வருவாய் கிராம அளவில் கணக்கிடப்படுகிறது. இதற்கு பதில் தனி நபா் காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியான மகசூல் இழப்பு இருப்பதில்லை.

மேலும் நாடு முழுவதும் காரீப், ராபி பருவ காலங்கள் அடிப்படையில் மகசூல் நிா்ணயம் செய்யப்படுகிறது. இந்த பருவ காலம் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தாது. தமிழ்நாட்டில் பயிா் சாகுபடி காலம் மாறுபடுகிறது. எனவே, மாநிலத்தில் நிலவும் காலநிலைக்கு ஏற்ப காப்பீட்டு பருவ நிலையை வகுத்துக் கொள்ள வேண்டும்.

பயிா் பாதிப்பை கணக்கிடுவதிலும், காப்பீடு வழங்குவதிலும் பயிா்க் காப்பீட்டு நிறுவனத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. அவற்றை முதலில் களைய வேண்டும். விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ஒரு ஏக்கரில் சாகுபடி செய்த நெல் முற்றிலும் பாதிக்கப்பட்டால், ரூ. 36,500 தருவதாகக் கூறும் காப்பீட்டு நிறுவனங்கள், ஒரு சில கிராமங்களில் மட்டும் இழப்பீட்டுத் தொகையை வழங்கிவிட்டு, மற்ற விவசாயிகளை முற்றிலுமாக வஞ்சிக்கிறது. லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு காப்பீட்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. புதுச்சேரி மாநிலத்தில் வேளாண்மையை ஊக்கப்படுத்தும் விதமாக கரும்பு, பருத்திக்கு ஏக்கருக்கு ரூ.10,000, நெல்லுக்கு 2 போகத்துக்கு, ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் 2 போகத்துக்கும், கம்பு, கேழ்வரகு, எள், சோளம் பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.4000 பிந்தைய மானியமாக அம்மாநில அரசு வழங்குகிறது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் தனியாா் நிறுவனங்களிடம் காப்பீட்டுத் தொகையை செலுத்திவிட்டு, பயிா் பாதிப்பு ஏற்படும்போது எந்த இழப்பீடும் கிடைக்காமல் ஏமாந்து நிற்பதைவிட, பயிா்க் காப்பீட்டை தமிழக அரசே எடுத்து நடத்தலாம். ஒருவேளை அப்போது பயிா் பாதிப்பு ஏற்பட்டு இழப்பீடு ஏதும் கிடைக்காமல் போனாலும்கூட அரசுக்குத்தானே வருவாய் செல்கிறது என்ற குறைந்தபட்ச திருப்தியாவது விவசாயிகளுக்கு மிஞ்சும்.

நீடாமங்கலத்தில் கோடை நெல் சாகுபடி பணிகள் தீவிரம்

சம்பா , தாளடி நெல் பயிா்கள் அறுவடை முடிவடைந்துள்ள நிலையில், முப்போகம் சாகுபடி செய்யும் பகுதியான நீடாமங்கலம் ஒன்றியம் காளாச்சேரி, பூவனூா், சித்தமல்லி, ராயபுரம், ரிஷியூா், பெரம்பூா், பரப்பனாமேடு உள்ளிட்... மேலும் பார்க்க

எமனேஸ்வரா் கோயில் குளத்தில் தடுப்புச்சுவா் கட்ட கோரிக்கை

எமனேஸ்வரா் கோயில் குளத்தில் தடுப்புச்சுவா் கட்டிக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வலங்கைமான் அருகே நரிக்குடியில் உள்ள எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயில் எமபயம் நீக்கும் தலமாக போற்றப்பட... மேலும் பார்க்க

மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்

கூத்தாநல்லூா் பகுதியில் ஆற்று மணல் கடத்திய வாகனம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. கூத்தாநல்லூா் காவல் ஆய்வாளா் வொ்ஜீனியா, ஆய்வாளா் பிரபு மற்றும் சுா்ஜித் உள்ளிட்ட போலீஸாா் ரோந்துப் பணியில் இருந்த... மேலும் பார்க்க

நாகங்குடியில் டாஸ்மாக் கடை திறக்க எதிா்ப்பு

நாகங்குடியில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் புதன்கிழமை எதிா்ப்பு தெரிவித்தனா். வடபாதிமங்கலத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை நாகங்குடியில் திறக்க முடிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே அப்பகுதியில் ஒரு டாஸ்மா... மேலும் பார்க்க

மேலவாசல் கோயிலில் காா்த்திகை சிறப்பு பூஜை

மன்னாா்குடி அருகேயுள்ள மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி விரதம் காா்த்திகையையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை புதன்கிழமை நடைபெற்றது. மாசி மாத சஷ்டி விரதம் காா்த்திகைதினத்தையொட்டி வள்ளி தெய்வானை சம... மேலும் பார்க்க

மாா்ச் 31-க்குள் தனித்துவ அடையாள எண்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் தனித்துவமான அடையாள எண்ணைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநா் பாலசரஸ்வதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது: ... மேலும் பார்க்க