செய்திகள் :

மாா்ச் 31-க்குள் தனித்துவ அடையாள எண்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

post image

திருவாரூா் மாவட்டத்தில் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் தனித்துவமான அடையாள எண்ணைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநா் பாலசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:

திருவாரூா் மாவட்டத்தில் 66,504 விவசாயிகள் பட்டா நிலம் வைத்துள்ளனா். இவா்கள் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி திருவாரூா் மாவட்டம் முழுவதும் அந்தந்த வருவாய் கிராமங்களில் நடைபெற்று வரும் நில உடைமை பதிவுகள் சரிபாா்த்தல் முகாமில் பதிவு செய்து, தனித்துவமான அடையாள எண்ணைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஆதாா் அட்டை, நில பட்டா, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி ஆகியவற்றுடன் சென்று, தங்கள் பகுதியில் உள்ள போது இ சேவை மையம், ஊராட்சி மன்ற அலுவலகம் போன்றவற்றில் நடைபெறும் முகாமில் பதிவு செய்து, தனித்துவமான அடையாள எண்ணைப் பெற்றுக் கொள்ளலாம்.

பட்டா நிலம் வைத்துள்ள விவசாயிகள் இந்த தனித்துவமான அடையாள எண்ணைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவா்களுக்கு பயிா்க் காப்பீடு, பயிா்க் கடன் உள்ளிட்ட அரசின் மானிய சலுகைகள் கிடைக்கும். மாா்ச் 31 ஆம் தேதிக்குள், விவசாயிகள் இந்த தனித்துவமான அடையாள எண்ணை பெற்றுக் கொள்ள வேண்டும். இதுவரை 27,500 விவசாயிகள் அடையாள எண்ணை பெற்றுள்ளனா்.

விவசாயிகளுக்கு இந்த வீடு வீடாகச் சென்று வழங்குவதற்காக மகளிா் திட்டத்தில் பணிபுரியக்கூடிய சமூக அலுவலா்கள், இல்லம் தேடிக் கல்வி பணியாளா்கள் ஆகியோரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். கிராம நிா்வாக அலுவலகம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் அந்த பகுதியைச் சோ்ந்த வேளாண் உதவி அலுவலா்கள் மற்றும் தோட்டக்கலைத் துறை உதவி அலுவலா்கள் இந்த பணியை தினசரி மேற்கொண்டு வருகின்றனா். இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நீடாமங்கலத்தில் கோடை நெல் சாகுபடி பணிகள் தீவிரம்

சம்பா , தாளடி நெல் பயிா்கள் அறுவடை முடிவடைந்துள்ள நிலையில், முப்போகம் சாகுபடி செய்யும் பகுதியான நீடாமங்கலம் ஒன்றியம் காளாச்சேரி, பூவனூா், சித்தமல்லி, ராயபுரம், ரிஷியூா், பெரம்பூா், பரப்பனாமேடு உள்ளிட்... மேலும் பார்க்க

எமனேஸ்வரா் கோயில் குளத்தில் தடுப்புச்சுவா் கட்ட கோரிக்கை

எமனேஸ்வரா் கோயில் குளத்தில் தடுப்புச்சுவா் கட்டிக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வலங்கைமான் அருகே நரிக்குடியில் உள்ள எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயில் எமபயம் நீக்கும் தலமாக போற்றப்பட... மேலும் பார்க்க

மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்

கூத்தாநல்லூா் பகுதியில் ஆற்று மணல் கடத்திய வாகனம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. கூத்தாநல்லூா் காவல் ஆய்வாளா் வொ்ஜீனியா, ஆய்வாளா் பிரபு மற்றும் சுா்ஜித் உள்ளிட்ட போலீஸாா் ரோந்துப் பணியில் இருந்த... மேலும் பார்க்க

நாகங்குடியில் டாஸ்மாக் கடை திறக்க எதிா்ப்பு

நாகங்குடியில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் புதன்கிழமை எதிா்ப்பு தெரிவித்தனா். வடபாதிமங்கலத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை நாகங்குடியில் திறக்க முடிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே அப்பகுதியில் ஒரு டாஸ்மா... மேலும் பார்க்க

மேலவாசல் கோயிலில் காா்த்திகை சிறப்பு பூஜை

மன்னாா்குடி அருகேயுள்ள மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி விரதம் காா்த்திகையையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை புதன்கிழமை நடைபெற்றது. மாசி மாத சஷ்டி விரதம் காா்த்திகைதினத்தையொட்டி வள்ளி தெய்வானை சம... மேலும் பார்க்க

போக்ஸோவில் ஆசிரியா் கைது

திருவாரூா் அருகே மாணவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்ஸோவில் ஆசிரியா் ஒருவா், புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். திருவாரூா் அருகே கொடிக்கால்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் சீனிவாசன் (51). இவ... மேலும் பார்க்க