செய்திகள் :

யேமனில் இஸ்ரேல் கடற்படை முதல்முறையாகத் தாக்குதல்

post image

துபை: யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள துறைமுக நகரான ஹூதைதாவில் இஸ்ரேல் கடற்படை முதல்முறையாக செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது.

தங்களின் அல்-மசீரா தொலைக்காட்சி மூலம் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதல் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். துறைமுகத்தில் கப்பல் நிறுத்தும் இடங்கள் குறிவைக்கப்பட்டதாக அவர்கள் கூறினாலும், இது தொடர்பான கூடுதல் விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை.

இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது கடற்படை ஏவுகணை கப்பல்கள் மூலம் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அறிவித்தது. ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதல்களில் இஸ்ரேல் தனது கடற்படையை ஈடுபடுத்தியுள்ளது இதுவே முதல்முறை.

காஸா போரில் ஹமாஸூக்கு ஆதரவு தெரிவித்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலை நோக்கி ஏவுகணை வீசுவது அதிகரித்துவருகிறது. இதற்கு ஹூதைதா, ராஸ் ஈஸா, அல்-சலீஃப் துறைமுகங்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டிய இஸ்ரேல், அந்தப் பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இணையதளம் மூலம் திங்கள்கிழமை இரவு எச்சரிக்கை விடுத்தது.

அதன் தொடர்ச்சியாக ஹூதைதா துறைமுகத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

2014-இல் யேமன் தலைநகர் சனா உள்ளிட்ட கணிசமான பகுதிகளை ஹூதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதிலிருந்து பல்லாயிரக்கணக்கான யேமானியர்களுக்கு உணவு மற்றும் பிற

நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்கான முக்கிய நுழைவாயிலாக ஹூதைதா துறைமுகம் உள்ளது.

அந்தத் துறைமுகம் தற்போது இஸ்ரேல் கடற்படையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது யேமன் மக்களுக்கான நிவாரணப் பொருள் விநியோகத்தை பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

ஆபரேஷன் ரைசிங் லயன்: ஈரானில் புதிய ராணுவ தளபதிகள் நியமனம்!

இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் ராணுவப்படைகளின் தளபதிகளுக்கு பதிலாக, புதிய தளபதிகளை நியமித்து அந்நாட்டு உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி உத்தரவிட்டுள்ளார். ஆபரேஷன் ரைஸிங் லயன் என்ற பெயரில் ஈர... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் முப்படை தலைமைத் தளபதி கொலை!

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் முப்படை தலைமைத் தளபதி முகமது பகேரி கொல்லப்பட்டுள்ளார்.ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங... மேலும் பார்க்க

ஈரான் பதற்றம்: இந்திய தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!

ஈரானில் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், அந்நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்த... மேலும் பார்க்க

ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதால், இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப்... மேலும் பார்க்க

இந்தியாவுடன் நல்லுறவைத் தொடரவே விருப்பம்: முகமது யூனுஸ்

‘இந்தியாவுடன் நல்லுறவைத் தொடரவே வங்கதேசம் விரும்புகிறது; ஆனால், அதில் எப்போதும் சில பிரச்னைகள் நிலவி வருகின்றன’ என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் தெரிவித்தாா். பிரிட்டனுக்கு 4 நாள் சுற... மேலும் பார்க்க

அணுசக்தி வாக்குறுதிகளை ஈரான் நிறைவேற்றவில்லை

ஈரான் தனது அணுசக்தி வாக்குறுதிகளை பின்பற்றவில்லை என்று ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ 20 ஆண்டுகளில் முதல்முறையாக குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து ஐ.நா.வில் அந்த அமைப்பு நிறைவேற்றியுள்ள... மேலும் பார்க்க