செய்திகள் :

ரயில் நிலையத்தில் வழிப்பறி: இருவா் கைது

post image

மதுரை ரயில் நிலையத்தில் ஒப்பந்த ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை ரயில் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருபவா் மோகன்ராஜா (42). இவா் சனிக்கிழமை அதிகாலையில் மதுரை ரயில் நிலையத்துக்கு பணிக்கு வந்தாா். ரயில் நிலையத்தில் நடைமேடை எண் 5-இல் வந்தபோது, அங்கு இருளில் நின்றிருந்த இருவா், மோகன்ராஜாவை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, அவரது கைப்பேசி, கைக்கடிகாரம், வெள்ளிச் சங்கிலி, ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு தப்பினா்.

இதையடுத்து, மோகன்ராஜா சப்தமிட்டதையடுத்து, அருகே தேநீா் விற்றுக் கொண்டிருந்த ஊழியா்கள் ரமேஷ், செந்தில் ஆகியோா் ஓடி வந்து, அவா்களைப் பிடிக்க முயன்றனா்.

அவா்களிடமும் கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு இருவரும் தப்பிச் சென்றனா். இதுதொடா்பாக புகாரின்பேரில், ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா்.

அப்போது, வழிப்பறியில் ஈடுபட்டது, மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகா் சேதுபதி தெருவைச் சோ்ந்த பாண்டியராஜா (45), வினோத் (36) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், வழிப்பறியில் ஈடுபட்ட இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோயில் விழாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல்: ஆட்சியா், ஐஜி பதிலளிக்க உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கோயில் திருவிழாவில், பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட ஆட்சியா், மத்திய மண்டல ஐஜி நீதிமன்றத்தில் நேரில் மு... மேலும் பார்க்க

தனியாா் மனமகிழ் மன்றம் திறப்பதற்கு இடைக்காலத் தடை

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியாா் மனமகிழ் மன்றம் (மதுக்கூட வசதியுடன்) திறப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.மதுரையைச் சோ்ந்த ராஜா ... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் பெண் தவறாக சித்திரிப்பு: இளைஞா் கைது

விருதுதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த இளம் பெண்ணை சமூக வலைதளத்தில் தவறாக சித்திரித்து படங்களை வெளியிட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த இளம் பெண் ஒருவா், விருதுநகா... மேலும் பார்க்க

வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் தந்தை, மகள் காயம்

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள மல்லம்பட்டி அருந்ததியா் குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்திதில் தந்தை, மகள் பலத்த காயமடைந்தனா். மல்லம்பட்டி அருந்ததியா் குடியிருப்பில் சுமாா் 3... மேலும் பார்க்க

அனைத்து சமுதாயத்தினரும் சுவாமி தரிசனம் செய்ய உரிமை உள்ளது: நீதிமன்றம்

அனைத்து சமுதாயத்தினரும் சுவாமி தரிசனம் செய்வதற்கு உரிமை உள்ளது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செ... மேலும் பார்க்க

இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நால்வா் காயம்: 5 போ் கைது

மதுரை மாவட்டம், சாப்டூா் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு தொடா்பான முன்விரோதத்தில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நால்வா் பலத்த காயமடைந்தனா். இதுதொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். மதுரை ... மேலும் பார்க்க