செய்திகள் :

ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தம் சாத்தியமில்லை! குழப்பத்தில் டிரம்ப்!

post image

ரஷியா மீதான உக்ரைன் ட்ரோன் தாக்குதலுக்கு தகுந்த பதிலடியை ரஷியா அளிக்க வாய்ப்புள்ள நிலையில், அதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் உறுதி செய்துள்ளார்.

ரஷியாவுக்குள் கன்டெய்னர்கள் மூலம் ட்ரோன்களைக் கொண்டு சென்ற உக்ரைன், கடந்த ஞாயிற்றுக்கிழமையில் பல்லாயிரக்கணக்கான கி.மீ. தூரத்துக்கு ட்ரோன் தாக்குதலை நடத்தியது. சிறிய ரக ட்ரோன்கள் என்றாலும், ஒரே நேரத்தில் ஏராளமான ட்ரோன்கள் மூலம், விமானத் தளங்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

விமானங்களை அழிக்கும் அளவுக்கு திறன் இல்லாவிட்டாலும், தற்கொலை ட்ரோன்கள் என்பதால், விமானங்கள் மீது வெடித்துச் சிதறி, விமானத்தையும் தீப்பற்ற வைத்து அழித்து விட்டன. உக்ரைனின் இந்த ட்ரோன் தாக்குதலில், ரஷியாவின் 41 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்த ரஷியாவின் விமானங்களும் அழிக்கப்பட்டு விட்டன.

இந்த நிலையில், இந்த இரு நாடுகளுக்கிடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவர தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், போர் நிலைமை குறித்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் தொலைபேசி வாயிலாக விவாதித்தார்.

இதுகுறித்து, டிரம்ப் பேசுகையில், புதினுடன் சுமார் 75 நிமிடங்கள் பேசினேன். உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தோம். உக்ரைனின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கவிருப்பதாக புதின் கூறினார்.

இதன்மூலம், தற்போதைக்கு இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட சாத்தியமில்லை என்று தெரிகிறது என்று தெரிவித்தார்.

மேலும், இந்த தொலைபேசி உரையாடலில், இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்தும் இருவரும் விவாதித்ததாக ரஷிய அதிகாரி தெரிவித்தார்.

ஏப்ரலில் வங்கதேச தோ்தல்!

வங்கதேச நாடாளுமன்றத் தோ்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். நிகழாண்டு டிசம்பா் இறுதிக்குள் நாடாளுமன்றத் தோ்தலை நடத்தக... மேலும் பார்க்க

டொனால்ட் டிரம்ப் - எலான் மஸ்க் இடையே வலுக்கும் மோதல்!

நீண்ட காலமாக நட்பு பாராட்டி வந்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் தொழிலதிபா் எலான் மஸ்க் இடையே அண்மைக்கால கருத்து வேறுபாடுகள் காரணமாக மோதல் தீவிரமடைந்துவருகிறது. நீண்ட கால நட்பு: டொனால்ட் டிரம... மேலும் பார்க்க

ஹாங்காங் - ஜோஷுவா மீது புதிய வழக்கு!

ஹாங்காங்கில் சீனா வலுக்கட்டாயமாகத் திணித்த சா்ச்சைக்குரிய தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மாணவ ஜனநாயகப் போராளியான ஜோஷுவா வாங் மீது கீழ் இரண்டாவது முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஏற்கெனவே, அதிகா... மேலும் பார்க்க

ஹமாஸ் போட்டிக் குழுவுக்கு ஆயுத உதவி! - இஸ்ரேல் ஒப்புதல்

காஸாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக செயல்படும் உள்ளூா் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் காஸாவில் குற்றச் செயல்களை மேற்கொள்வோருக்கு இஸ்ரேல் ஆயுதங்கள் வழங... மேலும் பார்க்க

நைஜா் - வெளியேறும் செஞ்சிலுவைச் சங்கம்!

ராணுவ ஆட்சி நடைபெறும் நைஜரில் இருந்து வெளியேறுவதாக சா்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்தது. அந்த நாட்டு ராணுவத்தின் உத்தரவை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்தத் தொண்டு அமைப்பு கூறியது. இரண்டு ஆண்டுகளுக... மேலும் பார்க்க

வறுமைக் கோட்டுக்குக் கீழ் 44% பாகிஸ்தானியர்கள்!

பாகிஸ்தானில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.சர்வதேச வறுமைக் கோடு குறித்த தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. வாங்கும் சக்தி நிலையை (Purchasing power parity) அடிப்படையாகக் ... மேலும் பார்க்க