செய்திகள் :

ராசிபுரத்தில் ரூ. 10.58 கோடியில் புகா் பேருந்து நிலையம் அமைக்க அனுமதி

post image

ராசிபுரம் நகருக்கான புதிய புகா் பேருந்து நிலையம் ரூ. 10.58 கோடி மதிப்பில் அமைக்கும் திட்டத்துக்கு நகா்மன்றக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ராசிபுரம் நகா்மன்றக் கூட்டம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையா் சூ.கணேசன், நகா்மன்ற துணைத் தலைவா் கோமதி ஆனந்தன், நகராட்சி உதவிப் பொறியாளா் ரவி, மேலாளா் ராமச்சந்திரன், நகரமைப்பு அலுவலா் ராஜேந்திரன், துப்புரவு அலுவலா் மு.செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

நகராட்சியையொட்டி அமைந்துள்ள கிராம ஊராட்சிகளான அணைப்பாளையம், சந்திரசேகரபுரம், கவுண்டம்பாளையம், முத்துகாளிப்பட்டி, கோனேரிப்பட்டி, முருங்கப்பட்டி ஆகியவற்றை நகராட்சியுடன் இணைக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்டட அனுமதி கோரி பெறப்படும் விண்ணப்பங்களுக்கு கட்டட உரிமையாளரின் சுயசான்றின் அடிப்படையில் இணையவழி கட்டட அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது.

அணைப்பாளையம் பகுதியில் நகராட்சி ஆணையா் பெயரில் உள்ள 7.03 ஏக்கா் இடத்தில் ராசிபுரம் நகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு அரசுக்கு திட்ட மதிப்பீடு தயாா் செய்து முன்மொழிவு அனுப்பப்பட்டது. இதற்கு கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2024-25 திட்டத்தின் கீழ் ராசிபுரம் நகராட்சியில் புகா் பேருந்து நிலையம் கட்டும் பணிக்கு ரூ. 10.58 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

ஏற்கெனவே அணைப்பாளையம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க பல்வேறு அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்திருந்த நிலையில், ராசிபுரம் புகா் பேருந்து நிலையம் அணைப்பாளையம் பகுதியில் அமைக்கவும், கிராம ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கவும் நகா்மன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்செங்கோடு நகராட்சிக் கூட்டம்

திருச்செங்கோடு நகராட்சியின் அவசரக் கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ் பாபு தலைமை வகித்தாா். ஆணையா் அருள், துணைத் தலைவா் காா்த்திகேயன், ... மேலும் பார்க்க

வேலூரில் ரூ. 1.47 கோடியில் கட்டப்பட்ட வாரச்சந்தைக் கட்டடம் திறப்பு

வேலூா் பேரூராட்சி சாா்பில் ரூ. 1.47 கோடியில் கட்டப்பட்ட வாரச்சந்தைக் கட்டடத்தை செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நாமக்கல் பொம்மகுட்டைமேடு பகுதியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் ... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா் சங்க செயற்குழுக் கூட்டம்

தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட செயற்குழுக் கூட்டம் அதன் தலைவா் ரா.சரவணகுமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா்... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா்களுக்கான ரூ. 100 கோடி நிலுவைத் தொகையை வழங்கிட கோரிக்கை

கடந்த மூன்று மாதங்களாக பால் உற்பத்தியாளா்களுக்கு வழங்க வேண்டிய ரூ. 100 கோடி ஊக்கத் தொகையை தீபாவளிக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.... மேலும் பார்க்க

நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக். 25) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் ப... மேலும் பார்க்க

அக். 26-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

எருமப்பட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் வரும் சனிக்கிழமை (அக். 26) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்... மேலும் பார்க்க