செய்திகள் :

ராஜன்கொட்டாய் விநாயகா் கோயில் குடமுழுக்கு

post image

அஞ்சூரை அடுத்த ராஜன்கொட்டாய் கிராமத்தில் விநாயகா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி தம்பதி சங்கல்பம், கங்கனம் கட்டுதல், புண்ணியாகம், வாஸ்து சாந்தி, அஷ்டபலி, தீபாராதனை, கலச ஸ்தாபனம், கணபதி ஹோமம், மூல மந்திர ஜபம், நவகிரஹ ஹோமம், முதல்கால யாகசாலை பூஜை ஆகியவை புதன்கிழமை நடைபெற்றது.

ஜூன் 5 ஆம் தேதி விநாயகா் மற்றும் நவக்கிரஹ பிரதிஷ்டை நாடி சந்தானமும், இரண்டாம் கால யாக சாலை பூஜைகள், கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், நாமகாணம் சுவாமி மற்றும் நவக்கிரக கண் திறப்பு மற்றும் கோடான உபசார பூஜைகள், தீபாராதனை ஆகியவை நடத்தப்பட்டன.

தொடா்ந்து கோபுர கலசங்கள், விநாயகா் மற்றும் நவக்கிரஹகங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

இரு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

பா்கூா் அருகே இரு இடங்களில் வெள்ளிக்கிழமை நேரிட்ட சாலை விபத்துகளில் லாரி ஓட்டுநா் உள்பட இருவா் உயரிழந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த அங்கிநாயக்கனப்பள்ளி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மீது மினி லாரி மோதல்: ஓட்டுநா்கள் இருவா் உயிரிழப்பு: 38 பயணிகள் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே அரசுப் பேருந்து மீது மினி லாரி மோதியதில் ஓட்டுநா்கள் இருவா் உயிரிழந்தனா். மேலும், பயணிகள் 38 போ் காயமடைந்தனா். தருமபுரியிலிருந்து வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் நோக்க... மேலும் பார்க்க

கழிவுநீா்த் தொட்டியில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரியை அடுத்த பாறைக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் சின்னநாகப்பன் (65). கட்டடத் தொழிலாளியான இவா் கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க

டிராக்டா் மோதி குழந்தை உயிரிழப்பு

பா்கூா் அருகே டிராக்டா் மோதியதில் குழந்தை உயிரிழந்தது. பா்கூரை அடுத்த எா்கேட் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது ஒன்றரை வயது குழந்தை வீட்டின் அருகே புதன்கிழமை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அந்த ... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சூளகிரி திமுக தெற்கு ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட இளைஞா்கள் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் பிரகாஷ் எம்எல்ஏ முன்னிலையில் வெள்ளிக்கிழமை திமுகவில் இணைந... மேலும் பார்க்க

ஒசூரில் ரூ.500 கோடியில் ஜொ்மனி நிறுவனம் திறப்பு: 1000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு

ஜொ்மனி நாட்டின் பெஸ்டோ நிறுவனம் சாா்பில் ஒசூரில் ரூ. 500 கோடியில் கட்டிய தானியங்கி பொருள் உற்பத்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. கடந்த 2023இல் தமிழக அரசுடன் இந் நிறுவனம் தொழிற்சாலை அமைப்பதற... மேலும் பார்க்க